Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, November 28, 2009

இசையும் இறைவனும்

இசை என்ற தமிழ் வார்த்தைக்கு நிறைய அர்த்தம் உண்டு. சராசரியாக இசை என்ற வார்த்தையை ஒலி என்றும் பாடல்கள் என்றும் பயன்படுத்துகிறோம். இசை என்பதன் மூல அர்த்தம் இணங்குவது, ஆனந்தம் கொள்வது என்பதாகும்.

திருவள்ளுவரும் இசைபட வாழ்தல் என்கிறாரே அப்படி என்றால் பாடிகொண்டே வாழ்வதை குறிப்பதில்லை. பிறருக்கு தர்மம் செய்வதன் மூலம் மனநிறைவுடன் ஆனந்தமாக வாழ்வதை இசைபட என்கிறார். பிறர் போற்ற வாழ்வது என இத்திருக்குறளுக்கு அர்த்தம் போதிக்கபடுகிறது. சான்றோர்கள் பிறருக்கு தானம் செய்து பெருமை தேடிக்கொள் என கூறி இருக்கமாட்டார்கள்.

இசை என்பது ஒருவித யோக முறை. யோகம் என்றால் ஒன்றிணைதல் என்று பொருள். இறைநிலையுடன் ஒன்றிணைந்து இரண்டற கலப்பதற்கு இசை என்ற யோக முறை மிக முக்கியமானது.

இசை என்றவுடன் அதை பற்றி சில விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இசை என்பது மொழிகளை கடந்தது, மதங்களையும்... ஏன்.. மனித நிலையையும் கடந்தது.

இங்கே இசை என நான் குறிப்பிடுவது வார்த்தைகள் கொண்டு உருவாக்கபட்ட பாடல்களின் வடிவம் அல்ல. சங்கீதத்தில் ஆலாபனை என கூறுவார்களே அது போல வார்த்தைகள் அற்ற ஒலியின் ஏற்ற இறக்க நிலையே ஆலாபனை.

இசை என்பது இறைவனின் வடிவம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். இசை என்பதை நாதம் என பொருள் பட கூறுகிறார்கள். ப்ரணவம் இறைவனின் நாத வடிவம். முதலில் நாதம் பிறகே அனைத்து படைப்புகளும் விரிந்தது.

நாதம் என்ற ப்ரணவத்தின் கூறுகளான ஆ - உ- ம என்ற ஒலிகளின் மூலமே அனைத்தும் வெளிப்பட்டது. நம் மொழிகள் கலாச்சாரம், சிந்தனை அனைத்தின் உள்கட்டமைப்பும் இந்த ஒலியாலேயே விவரிக்க முடியும்.

நான் கூறிய ப்ரணவ மந்திரம் என்ற கருத்து ‘இந்து மதத்தின்’ கூறுகள் அல்ல. வேதம் என்ற ஆன்மீக நிலை இந்து மதம் என்ற வடிவம் கொண்டவுடன் தன் சுயத்தை இழந்து விடும் அபாயத்தை உணர்ந்து தன்னை மதத்திலிருந்து விடுவித்துக்கொண்டது.

எங்கே ஆன்மீகம் மத வடிவம் எடுக்கிறதோ அங்கே இசை என்ற நாதம் தன்னை விடுத்துக்கொண்டு வெளியேறிவிடுகிறது என்பது என் புரிதல். பாரத தேசத்தில் தோன்றிய ஞானிகள் இசையுடன் தங்களை மிகவும் ஒன்றிணைத்து கொண்டே இருந்தனர். மீரா, புரந்தர தாசர், ஞான சம்பந்தர் மற்றும் ஏனைய ஞானிகளை வரிசைபடுத்திக் கொண்டே செல்லலாம்.

இசை என்ற பாடல் வடிவம் சன்யாச வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு விலக்கபட்டு இருக்கிறது. சன்யாசிகள் பாடல், நடனம் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றில் மூழ்கக் கூடாது என கூறுவதன் காரணம் அவர்களின் மனம் என்ற தளத்தில் விகாரங்கள் (உணர்வுகள்) தோன்றிவிடக் கூடாது என்பதுதான். சன்யாச நிலை என்ற சூன்ய நிலையில் தோன்றிய மதங்கள் இசையை விலக்கின.

உலகின் சில மதங்கள் கூட தவறுதலான புரிதலால் இசையை விலக்கிவிட்டது.

சமணம்,இஸ்லாம் மற்றும் சில கிருஸ்துவ பிரிவுகள் இதில் அடக்கம்.

நாதத்தை (ஓசையை) பெட்டியில் அடைக்கமுடியாது என்பதை போல மதத்தால் இசையை அடக்க முடியாது. அதனால் தான் மதங்கள் இவ்வாறு விலக்கினாலும் ஞானிகள் இறைவனுடன் கலக்கும் பொழுது இசையை ஒரு பாதையாக தேர்ந்தெடுத்தனர். இதனால் இஸ்லாமிலிருந்து சூஃபியும், சமணத்திலிருந்து ஜென் என்ற ஞான மார்க்கங்கள் கிளைத்தன.

நாதமே கடவுளின் வடிவம் என்றால் மதத்தில் இருந்து நாதம் வெளியேறிவிட்டது என்றால் அப்பொழுது மதத்திற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

இசைவடிவில் இறைவனை காண முற்பட்டால் உலக சமுதாயம் ஒரே இறைவனை காண முடியும்.

மதங்களை கடந்த ஆன்மீகம் அவசியமானது. மதங்களையும் உருவங்களையும் கடந்த இறைநிலையே முழுமுதற் கடவுளான பிரம்ம நிலை என்கிறார் திருமூலர்.

ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

-----------------------------------------திருமந்திரம் - 105

ஒரு இசை வடிவத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்றால் அந்த இசை உங்களை ஈர்த்தது என்பதல்ல. உங்களுக்குள் இருக்கும் இறைநிலை ஒலிவடிவில் இருக்கிறது. அந்த ஒலி தன்னை போன்ற இசைவடிவை வெளியில் இருந்து ஈர்த்தது.

உங்கள் மனம் மற்றும் ஆன்மாவின் நிலைக்கேட்ப இசை உங்களை ஈர்க்கும். நீங்கள் மிகவும் கடினமான தன்மையில் இருந்தால் கடினமான இசையும், மிகவும் மென்மையாக இருந்தால் மெல்லிசையும் உங்களை கவரும். எளிமையாக சொன்னால் நீங்களே இசைதான். வெளியே கேட்கும் இசை உங்கள் உள் இசையை தூண்டுவதற்காத்தான்.

மதம்- இசை - இறைவன் என நிறைய பேசிவிட்டோம். உங்களுக்கு ஒரு சின்ன போட்டி...

கீழே இருக்கும் 2 நிமிட ஒலிக் கோப்பில் மதம் சார்ந்த புனித ஒலி இருக்கிறது. இந்த ஒலியை முழுமையாக கேட்டு அது எந்த மதம் சார்ந்தது என கூறுங்கள்.
Sound of religion....





விடையுடன் அடுத்த பதிவில் சந்தி
க்கிறேன்.

Thursday, November 26, 2009

உடலற்றவன்



கண்ணிலாத இருவர்

பார்த்துக் கொண்டிருந்த
டீவியை அணைத்தேன்.

பேச முடியாத இருவர்
கை ஜாடையில் பேசிய
ரகசியத்தை ரசித்தேன்.

காது கேட்காதவர்கள் பலர்
பாடிய பாடல்களை விமர்சித்தேன்.

கையில்லாதவர்கள் செதுக்க
இருந்த சிலையின் வடிவை
சீரழித்தேன்.

கால் இல்லாதவர்கள் மைதானத்தில்
உதைக்க இருந்த பந்தை வலைக்குள்
உதைத்தேன்.

ஊனமுற்றவர்களிடம் போராடி வெறுமையில்
முழுமையான உடல் இருப்பவனை
தேடும்பொழுது தான் தெரிந்தது...

எனக்கு உடலே இல்லை என...

Tuesday, November 24, 2009

பழைய பஞ்சாங்கம் 24-11-2009

திருவண்ணாமலையும் வலையுலகமும்

கடந்த 10ஆம் தேதி மாணவர்களுடன் ஸ்ரீசக்ர புரிக்கு பயணம் மேற்கொண்டேன். மூன்று நாள் திகட்ட திகட்ட ஆன்மீக உணர்வு உண்டு மகிழ்ந்தோம். சுப்பாண்டி இப்பயணத்தில் இணைந்து சிறப்பித்தார். அத்துடன் உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு வலயுலக பிரபலம் இதில் கலந்து எங்களை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார். அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.

கிரிவலம் வரும் பொழுது அங்கே மொட்டையன் சாமி என்ற அவதூதரை மாணவர்களுக்கு காட்டினேன். அழுக்கான தேகம், கையில் மூக்குப்பொடி, வாய்க்கு வந்ததை பேசி பிறரை திட்டுவது என வித்தியாசமானவர் மொட்டையன் சாமி. அவர் ஒரு டீக்கடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எல்லா மாணவர்களும் வியப்புடன் அவரை பார்த்துக் கொண்டிருக்க சுப்பாண்டியும் நம் பிரபல பதிவரும் அவரை பார்த்து அதிசயிக்காமல் சாதாரணமாக அமர்ந்திருந்தனர்.
எனக்கோ ஆச்சரியம். அவர்களிடம் தனிதனியே கேட்டேன்.

பிரபல பதிவர் சொன்னார், “வாய்க்கு வந்ததை பேசும் எத்தனையோ பதிவர்களே இது போல இருக்காங்க. நீங்க என்னடான இதை அதிசயங்கிறீங்க” என்றார்.


அதே கேள்வியை சுப்பாண்டியிடம் கேட்டேன், “உங்க ஸ்பீச்சை கேட்டு கேட்டு பழகி யார் பேசரதை கேட்டாலும் நீங்க பேசறமாதிரியே இருக்கு ஸ்வாமி” என்றான் உள் குத்துடன்.

நான் இருவரின் கருத்தையும் இணைத்து பார்க்க விரும்பவில்லை...!
-----------------------------
நேமா(அ)ல(ர்)ஜி

ஒரு நேமாலஜி வெறியரிடம் சிக்கிவிட்டேன். என்னிடம் தன் பிரதாபங்களை காட்ட அவரின் கருத்துக்களை என் மேல் வாரி தெளித்துக்கொண்டிருந்தார். எனக்கு நேமாலஜி மேல் நம்பிக்கை உண்டா என்றோ அதை பற்றிய கருத்தோ கேட்காமல் சராமாரியாக விளக்கிக் கொண்டிருந்தார்.


தீபா என பெயர் வைக்க கூடாதாம். அதில் தீ என்ற வார்த்தை இருக்காம். குரு பிரசாத் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் SAD என நடுவில் வருமாம். அதனால் அவர்களின் வாழ்க்கை சோகமாகிவிடுமாம். என் பெயரில் பின்னால் கார் என்ற ஒலி வருகிறதாம் அதனால் என்னால் சுயமாக இயங்க முடியாதாம். யாரோ ஒருவர் தான் என்னை இயக்குவாரம். முடியல...


அவரிடம் முகத்தை சீரியசாக்கிக் கொண்டு ஒரு கதை சொன்னேன்...


நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தினரிடம் ஒரு வெளிநாட்டுக்காரர்கள் சிக்கிவிட்டார்கள். அதில் ஒருவர் பெயர் சேவு, இன்னொருவர் பெயர் காவு. இருவரையும் கட்டி தலையில் தூக்கிவைச்சு கொண்டு போனாங்க.
நம்மை சாப்பிட போறாங்கனு தெரிஞ்சு இருவரும் கதறினார்கள்.

சேவு ஆங்கிலத்தில், “மனிதர்களை எல்லாம் சாப்பிடலாம இது உங்களுக்கே நல்ல இருக்கா?” என கேட்டான்.
அந்த கூட்டதிலிருந்து ஒருவன் வெளிப்பட்டு ஆங்கிலத்தில் உங்க ரெண்டு பேரு பெயரையும் சொல்லுங்க என்றான். சேவுக்கு ஒரே ஆச்சரியம் கூட்டத்தில் ஒருவன் ஆங்கிலம் பேசுறான். இவன் கிட்ட எதையாவது சொல்லி தப்பிச்சிடலாம்னு நினைச்சான்.

அதற்குள் நம்ம நேமாலஜிட் குறுக்கிட்டு பார்த்தீங்களா நேமாலஜி வர்க் ஆயிருக்கு, அவன் பெயர் சேவு (save) என்றார்.


கதையை தொடர்ந்தேன்.
சேவு அந்த நரமாமிச ஆசாமியிடம் எதற்கு பெயரை கேட்கறீங்க என்றான். அந்த ஆசாமி சொன்னான், ”எங்க மெனு கார்டில் எழுதி வைக்கனும்”. சேவு என்ற நேமாலஜி வேலை செய்ததோ இல்லையோ.. கூட இருந்தவன் பெயர் வேலை செய்தது :)
------------------------------
வலையுலக ஜனநாயகம்

வர வர என் வலைப்பக்கத்தில் ஜனநாயகம் இல்லை என ஒரு பதிவர் தனிமடல் அனுப்பி இருந்தார். மாடுரேஷன் போடுகிறேனாம். சிலரை கண்டிக்கிறேனாம். பிறரின் கருத்தை ஏற்க மாட்டேன் என்கிறேனாம். ஒரே ஜனநாயக விதிமீறலாக இருக்கிறது என்றார்.


அவரின் ஆவலை மனதில் கொண்டு ஒரு ஜனநாயக விஷயத்தையாவது ஆவன செய்யலாம் என இருக்கிறேன். இந்த வலைபக்கத்தில் ஒரு விஷயத்தை எழுதவேண்டும் என நினைத்து உட்கார்ந்தால் ஏகப்பட்ட விஷயங்கள் என் முன்னால் நிற்கிறது. எதை எழுதவேண்டும் என தெரியவில்லை. (விஷயம் இல்லையா என கேட்பவர்கள் தனியாக சாட்டில் வரவும் :) ).


அனைத்து கருத்துக்களும் எனக்கு முக்கியமாக படுவதால், வலைப்பூவை படிப்பவர்களான உங்களிடத்திலேயே எந்த தலைப்பில் பதிவெழுதுவது என தேர்ந்தெடுக்க சொல்லலாம் என இருக்கேன்.

(ஏகப்பட்ட ஆணி இருக்கு அதில் எதை பிடுங்க? நீ பிடுங்கிறது எல்லாம் தேவையில்லாத ஆணிதான். போன்ற வசனங்கள் மாடுரேஷன் போடப்படும். ஆணியே பிடுங்க வேண்டாம் என சொல்லும் வசனங்கள் பார்த்தவுடன் டெலிட் செய்யப்படும் :) )

பக்கவாட்டில் இருக்கும் தேர்தலில்(poll) கலந்து கொண்டு பிடித்த தலைப்பை தேர்ந்தெடுங்கள். ஒன்றுக்கு மேம்பட்டது பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் வரிசைப்படுத்துங்கள்.
---------------------------------

கவிதை

சில நாளுக்கு முன் என் கூகுள் ஸ்டேட்டஸில் எழுதிய கவிதை வரிகள்.


பசு என்றேன் இந்து ப்ராமணன் என்றார்கள்
ஆடு என்றேன் ஆண்டவரே என்றார்கள்.
ஒட்டகம் என்றேன் அவனா நீ என்றனர்.

தயவு செய்து...மிருகத்தை வைத்தல்ல

மனிதனை வைத்தே மனிதத்தை எடைபோடுங்கள்.

Wednesday, November 18, 2009

பாவனாவை பற்றிய கிசு கிசு

தென்னிந்திய சினிமா நடிகை பாவனா உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரை பற்றி ஒரு கிசு கிசு கூறப்போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும் எனக்கு அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை. நீங்கள் என்னிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்று அர்த்தம். பாவனா ரசிகர்கள் என்னை பொருத்தருள்க.

நாம் இங்கே பேசப்போவது “ப்ரதி பக்‌ஷ பாவனா” என்ற விஷயத்தை பற்றியது. பதஞ்சலி என்ற மாமுனிவர் எழுதிய பதஞ்சலி யோகசூத்திரத்தின் அற்புத வரிகளில் இதுவும் ஒன்று. இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து பொருள் பார்ப்போம்.

ப்ரதி என்ற வார்தை தமிழில் பிரதி என பயன்படுத்தலாம்.
அதாவது ஒன்றை போன்ற மற்றொன்று என்று அர்த்தம்.

பக்‌ஷ என்றா நீங்கள் நினைப்பது போல நவீன ராவணனின் பெயர் இல்லை இது. பக்ஷம் என்றால் பகுதி என்று அர்த்தம். உங்கள் உடல் என்பது ஒரே தன்மை என்றாலும் அதில் வலது இடது என இரண்டாக பிரிக்கலாம் அல்லவா? அது போல எப்பொருளும் இரு பிரிவுகள் அல்லது பல பிரிவுகள் கொண்டதாக இருக்கும். இப்பிரிவுகளுக்கு பக்‌ஷம் என்று பெயர். உங்கள் இடது தக்‌ஷிண பக்‌ஷம் மற்றும் வலதை வாமன பக்‌ஷம் என்கிறது வட மொழி.

பாவனா என்றால் ஒன்றை இருப்பதாக கருதுதல். பாவனை செய்தல் என்றால் இல்லாத ஒன்றை இருப்பதாக பிறருக்கு உணர்த்துவது என்பது பொருள். உதாரணமாக நாட்டியத்தில் நட்டியம் செய்பவர் கையில் பானை இருப்பது போல அசைந்து வருவார். அதை பார்க்கும் பொழுது நமக்கு பானையுடன் அவர் வருவது போலவே இருக்கும். நாட்டிய பாவனை என இதற்கு பெயர்.

மூன்று வார்த்தைகளையும் தனிதனியாக பார்த்தோம் ஒன்றாக இணைத்தால் இதன் பொருள் என்ன தெரியுமா?

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால் கட்டாயம் ஒரு நன்மை ஒளிந்திருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு விஷயம் உண்டு.

தீமையான விஷயத்தில் மட்டுமல்ல. நன்மையான விஷயத்திலும் இது இருக்கும். நன்மையான விஷயத்தில் கூடுதலாகவும், பிற விஷயங்களில் குறைவாகவும் இருக்கும்.

எல்லா விஷயத்தையும் பாஸிடிவாக பார் என்பதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பதஞ்சலி பாஸிடிவாக இல்லை என்றாலும் பாஸிடிவாகவே பார் என கூறவில்லை. ஒவ்வொரு நிகழ்விலும் 'கண்டிப்பாக' நன்மை உண்டு என உறுதியாக கூறுகிறார்.அதனால்தான் பதஞ்சலி ஒவ்வொரு நிகழ்விலும் இருக்கும் நன்மையை ஒரு பிரிவாக உருவகித்துக்கொள் என்கிறார்.

சிலரின் வாழ்க்கையில் இயல்பாகவும், சிலர் முயன்றாலும் இவ்வழியை எளிமையாக பின்பற்ற முடியும்.

அறுபது வயது மதிக்கதக்கவர் என்னிடம் கூறினார். நல்ல வேளை நான் அரசு வேலையில் சேரவில்லை. இல்லை என்றால் இந்நேரம் ரிடையர் ஆகி இருப்பேன் என்றார். இது ஒருவகை ப்ரதிபக்‌ஷ பாவனை தானே?

சுப்பாண்டி ப்ரதி பகஷ பாவனையில் கை தேர்ந்தவன். இந்த தத்துவம் அவன் வாழ்வுடன் இணைந்துவிட்டது என்றே கூறலாம்.

காக்கை எச்சமிட்டால்.... நல்ல வேளை பசுக்கள் மேலே பறப்பதில்லை என்ற அளவுக்கு சுப்பாண்டியின் பரதிபக்‌ஷம் பிரசித்தி.

ஒரு இளைஞன் அடிக்கடி தற்கொலைக்கு முயல்கிறான் அவனை தெளிவுபடுத்துங்கள் என அவனின் தந்தை என்னிடத்தில் அனுப்பி வைத்தார்.

நானும் என்னால் முடிந்த அளவு அறிவுரைகள், குட்டிக்கதைகள் எல்லாம் பல மணி நேரம் சொல்லிப் பார்த்தேன். இளைஞனின் நிலை அப்படியே இருந்தது.

“குருஜீ நான் வேணும்னா முயற்சி செய்யவா?” என காதில் கிசுகிசுத்தான் சுப்பாண்டி.

நானும் கொஞ்சம் ஓய்வு எடுக்க சரி என கூறினேன். அந்த இளைஞனுடன் சுப்பாண்டி தனியே பேசினான். சில நிமிடங்களில் அந்த இளைஞன் என்னிடத்தில் வந்து இனிமேல் தற்கொலை செய்ய மாட்டேன் என்றான். எனக்கோ ஆச்சரியம். எப்படி இது. நான் தலைகீழாக நின்று முடியாத விஷயம் சுப்பண்டியால் சில நிமிடங்களில் முடிந்தது என குழப்பத்தில் அந்த இளைஞனிடமே கேட்டேன்.

அந்த இளைஞன் சொன்னான், “ முட்டாள் தனமா பேசற சுப்பாண்டியும், அவனை கட்டி மேய்க்கும் நீங்களும் உயிரோட இருக்கும் போது நான் ஏன் சாகணும்?”

பார்த்தீங்களா சுப்பாண்டியை நான் என்னுடன் வைத்திருப்பதிலும் ஏதோ ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

என் வாழ்க்கையில் பல நிலைகளில் ப்ரதிபக்‌ஷ பாவனையை பயன்படுத்துகிறேன். என்னை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாததால் அவற்றை விவரிக்க முடியாது.

இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களால் விளக்குகிறேன். வேதகால வாழ்க்கை என்ற தொடரை துவங்கியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்னை பற்றி சில விமர்சனங்கள் கூறினார்கள்.

இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் இருக்க முடியும்?

வேதகால வாழ்க்கை தொடரை பதிவிட்டு திரட்டியில் இணைத்தப்பின் சிலர் மட்டுமே படிப்பார்கள் என நினைத்தேன். அது அவ்வளவு சுவாரசியமான பதிவல்லவே? எல்லோரும் படிப்பார்களா என நினைத்தேன். ஆனால் பதிவின் கருத்துக்களை திரட்டிகளை விட இவர்களின் திட்டுக்களே வெளிக்கொண்டுவந்தது.

பலர் என்னை காரசாரமாக விமர்சனம் செய்ய அதைபடித்த புதியவர்கள் அப்படி என்னதான் இவன் எழுதி இருக்கிறான் என படிக்க வந்தார்கள். புதிய நபர்களை இங்கே கூட்டி வந்த பெருமையும், பலருக்கு வேதகால வாழ்க்கை முறையை கொண்டு சேர்த்ததும் என்னை விமர்சித்தவர்களே. அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு நண்பர் என்னை விமர்சித்த பதிவில் நான் பத்தாம் வகுப்பு பெயில் என குறிப்பிட்டு என் வாழ்க்கை வரலாற்ற அவரே எழுதி இருந்தார். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவை தாண்டாத என்னை பத்தாம் வகுப்பு வரை படித்ததாக அவர் கூறியதும் ஒருவகை பிரதிபக்‌ஷம் தானே?

ஸ்ரீசக்ர புரியில் அந்தணர்களின் மிகைமிஞ்சிய செயலை கண்டித்துள்ள வரிகளை மறந்து பசு,வேதம் என்றவுடன் நானும் அந்தணன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஸ்ரீசக்ர புரியில் இணைத்த புகைப்படத்தை மீண்டும் இங்கே இணைக்கிறேன்.

நீங்களே பாருங்கள் இந்த புகைப்படத்தில் நம் மக்கள் எதிர்பார்க்கும் அந்தணனுக்கு உண்டான லக்‌ஷணம் ஏதேனும் என்னிடத்தில் உண்டா? முக்கியமாக தோள்பட்டையில் பூணுல் இல்லை.
சரி இதில் என்ன ப்ரதிபக்‌ஷம் என்றுதானே கேட்கிறீர்கள்?

அவர்கள் அந்தணன் என நினைத்ததால் இந்த புகைப்படத்தை காட்டி விளக்க முடிகிறது. இதுவே நான் சூஃபி ஞானிகளை பற்றியோ, இஸ்லாமை பற்றியோ எழுதி இருந்தால்? எப்படிபட்ட புகைப்படத்தை காட்டி விளக்க வேண்டி இருந்திருக்கும்?

( சிந்தனை உதவிக்காக மாண்டோ அவர்களுக்கு நன்றி)

அதனால்தான் சொல்லுகிறேன்.... ப்ரதி பக்‌ஷ பாவனா... எல்லாவற்றிலும் காணலாம்.

Monday, November 16, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 13

வேதகால வாழ்க்கை என்ற இத்தொடரை துவங்கும் பொழுது கூறினேன் மனிதர்கள் அனைத்தையும் முன் முடிவுடனே அனுகுகிறார்கள் என்று. இதன் காரணம் நீங்கள் இப்பகுதியை படித்தால் விளங்கும்.

வேதகால வாழ்க்கை என்பது ஒரு தத்துவம் போல மேஜையில் அமர்ந்து கணினியில் செய்யும் கற்பனை விஷயம் அல்ல. இதற்கு நீங்கள் கொஞ்சம் உடல் உழைப்பு செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை சூழல் பிரகாசம் ஆக நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் என்ன தவறு? நவீன அறிவியல் என்ற பெயரில் பலர் கண்டுபிடிப்புகளால் பூமியின் சூழலையும், மனித மனங்களையும் அசுத்தமாக்குகிறார்கள். நவீன கண்டுபிடிப்புகள் தேவையை பொருத்தே கண்டறியப்படுகிறது. ஆனால் அதன் பின்விளைவுகள் மிகவும் கொடூரமானவை.

வாகனங்களுக்கு பெட்ரோல் பயன்படுத்தும் பொழுது நமக்கு தெரியாது ஓசோனில் ஓட்டைவிழும் என்று. அது போலவே செல்போன் பயன்படுத்தும் பொழுது அதன் கதிர்வீச்சால் பல பறவையினங்கள் மலடான விஷயம் என சொல்லிக்கொண்டே போகலாம். நான் நவீன விஞ்ஞானத்திற்கு எதிரானவன் அல்ல. சுயநலம் மட்டுமே மண்டிகிடக்கும் விஞ்ஞான யுக்திகளுக்கு எதிரானவன். உங்களின் குடை உங்களுக்கு செளகரியமாக இருக்கும் பொழுது அதன் கம்பி பிறர் கண்களை குத்தாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

வேதகாலத்தில் இருக்கும் கண்டுபிடிப்புகள் பின்விளைவுகளை கொண்டது அன்று. மிருகத்தோலை பயன்படுத்திய ரிஷிகள் அவற்றை அப்படியே விட்டுவிட்டு சென்றாலும் சிலவருடங்களில் அது இயற்கையுடன் கலந்துவிடும். ஆனால் நீங்கள் பயன்படுத்திய சிப்ஸ் பாக்கெட்டை பல்லாயிரகணக்கான வருடம் சென்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு எடுப்பார்கள்.

பலவரலாற்று அறிஞசர்களுக்கு வேதகாலத்தை பற்றி சான்றுகள் கிடைக்காதது இதனால்தான். அவர்கள் பயன்படுத்திய, உருவாக்கிய விஷயங்கள் அனைத்தும் இயற்கையுடன் இணைந்தவிஷயங்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு எளிமையாக இணைந்துவிட்டது.

சில வேடிக்கை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். பிராணிகள் விடும் ஏப்பத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதாம் அது உலக வெப்பமயமாதலுக்கு காரணமாம். அவர்கள் உரையாற்றிய அரங்கில் இருக்கும் குளிர்சாதனம் வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா? அவர்கள் வந்த வாகனமும், விமானமும் உலக வெப்பமயமாதலுக்கு காரணம் இல்லையா?

பசு ஏப்பம் விட்டதும், கங்காருவின் வேண்டாம்.....விடுங்கள்.

விஞ்ஞானிகளுக்கு ஏதோ ஒரு
காரணம் வேண்டும். சிலர் உலக வெப்பமடைதல் என்ற விஷயத்தையே எதிர்கிறார்கள். காரணம் உலக சுழற்சியில் இது இயல்பு என்கிறார்கள்.

பூமி தோன்றிய நாளில்
வெப்பமாவும், பிறகு குளிர்ந்து உறை பனியாக இருந்தது. அப்படிபட்ட பனி உருகி வட, தென் துருவத்தில் மட்டும் இருக்கிறது. இடைபட்ட பகுதியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருகிய பனி எந்த மிருகம் விட்ட ஏப்பம் என கேட்க தோன்றுகிறது.

வேதகால வாழ்க்கை என்ற விஷயத்தை நான் ஒரு எழுத்துவடிவில் எழுதவில்லை.
செயல்வடிவில் கடந்த 5 வருடங்களாகவும். உணர்வு நிலையில் பலவருடங்களாகவும் கொண்ட விஷயம். கோவை வேளாண்மை பல்கலைகழகத்துடன் இணைந்து வேதகால வாழ்க்கை மற்றும் வேளாண்மையை மேற்கொண்டு சிறந்த விவசாய முறை என்ற ஆய்வை சமர்ப்பித்துள்ளேன்.


நீலகிரி தோட்டகலைத்துறையும், வேளாண்மை பல்கலைகழகமும் நான்கு முனைவர்களை கொண்டு இம்முறையை ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் வேளாண்மையில் இம்முறை ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். எனது கள அனுபம், ஆன்மீக ஆனுபவத்தாலும் வேளாண் துறை மாணவர்களுக்கு இம்முறையை வருடத்திற்கு மூன்று கருத்தாய்வு நடத்தி வெளிப்படுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி பட்டறையும், விவசாய அலுவலர்களுக்கு இதன் அடிப்படையும் விளக்குகிறேன். இவை அனைத்தும் பல்கலைகழகம் வாயிலாக மட்டுமே செய்கிறேன். இது போக சில தனியாரின் நிலங்களுக்கு வேதகால வேளாண்மை முறையில் வேளாண்மை செய்ய உதவி வருகிறேன்.

வேதகால வேளாண்மை தவிர, ’நட்சத்திர வனம்’ என்ற பெயரில் 27 நட்சத்திரத்திற்கான மரங்களை சிறிய தோட்டமாக நட்டு அப்பகுதி ப்ராணனை மேம்படுத்திவருகிறேன். இது ஒரு இலவச சேவையாக செய்துவருகிறேன். இது மனிதகுலத்துக்கான சேவையாக செய்துவருகிறோம். நீங்கள் இதில் இணைந்து எங்களுடன் பணியாற்ற விருப்பம் இருந்தாலும் கூறவும்.

உங்கள் பகுதியில் சிறிய நிலப்பரப்பு இருந்தால் கூறுங்கள், நாங்கள் இலவசமாக நட்சத்திரவனம் ஏற்படுத்தி தருகிறேம்.

ஊசியிலை காடுகளில் வளரும் 27 நட்சத்திர மரங்களை கண்டரிந்து உதகையில் நட்சத்திர வனம் ஏற்படுத்தி உள்ளேன். அதன் செய்தி இதோ சுட்டி.

எனது வேதகால பணிகளை பட்டியலிட்டால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். கல்லூரி மாணவர்களிடம் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். விரைவில் வேதகாலம் மலரும்.

ஆம் வேதகாலம் என்பது முன்காலத்தில் இருந்தது அல்ல. சக உயிர்களுக்கு பாதிப்பு இல்லாமல், முழுமையான ப்ரபஞ்ச ஆற்றலுடன் வாழும் வாழ்க்கையை நாம் இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.

முன்காலத்தில் சிலரால் மட்டுமே பின்பற்றபட்ட வேதகாலத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு நாமும் அந்த ஒளியில் கலந்து மேம்படுவோம்.

(நிறைவு)

Saturday, November 14, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 12

நம் வாழ்க்கையில் நிறைய நன்மை கொடுக்கும் காரியங்களை நமக்கு தெரிந்தாலும் அவற்றை பின்பற்ற முடியாது. உதாரணம் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாட்டை சொல்லலாம். நமக்கு சுற்றுசூழலுக்கும் ஒவ்வாத காரியங்கள் பலவற்றை மன உறுத்தல் இல்லாமல் நம்மால் செய்ய முடிகிறது. அது போன்றுதான் வேதகால வாழ்க்கை முறையும். மரம் நமக்கு என்ன செய்கிறது, பசு நமக்கு கொடுக்கும் நன்மைகள் என்ன என அனைவருக்கும் புரிந்தாலும் அவற்றை வளர்க்க முயலமாட்டோம்.

மனித குணம் எப்பொழுதும் புலன் இன்பத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அலாதியானது. ஒருவருக்கு சுவையான உணவு இருக்கும் இடம் தெரிந்தால் அதை பெற அவர் பல காரணம் கூறுவார். அதே போல தானக்கு நன்மை என தெரிந்தும் சில காரியங்களை செய்ய நாம் பல காரணம் கூறி தட்டிக்கழிப்போம்.

பின்வரும் காரணங்கள் பலர் வேதகால வாழ்க்கை பின்பற்ற முடியாது என கூறும் காரணங்கள்.

மரம் வைக்க என் வீட்டில் இடம் இல்லை. நான் அப்பார்ட்மெண்டில் இருக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கிறேன் அதனால் நீங்கள் கூறும் மரங்கள் இங்கே இல்லை. பசு மாடு எங்கள் ஊரில் தடை. பசுமாடு வளக்கும் அளவிற்கு என் வீட்டில் வசதியான இடம் இல்லை. மேலும் பசுவை பராமரிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது.

முதலில் மரம் வளர்க்கும் முறையை பார்ப்போம்.

அனேகமாக நகரங்களில் மே ப்ளவர் மரங்கள் போன்ற மரங்களையே வீதிகளில் நடுகிறார்கள். இதன் காரணம் அவற்றிற்கு பராமரிப்பு குறைவு என்பதும், வேகமாக வளருவதும் ஒரு காரணம்.

மே-ப்ளவர் மரங்கள் ப்ராண சக்தி மிகவும் குறைவான மரங்கள். இவை புளியமரம் போல ப்ராணனை நம்மிடமிருந்து பறிப்பதில்லை என்பதும், நல்ல நிழல் மற்றும் காற்று தரும் மரம் என்பது ஆறுதலான தகவல்கள்.

ஆனால் இம்மரங்களுக்கு பதில் வன்னி, வேப்பம், பூவரசு, மரமல்லி போன்ற மரங்கள் வைத்தால் மிகவும் சிறப்பான சூழல் அமையும். உங்கள் பிறந்தநாள், மண நாள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினம் இவற்றில் ஏதேனும் ஒன்றில் உங்கள் வீட்டின் அருகில் மரம் நடலாம். இதற்கு மரம் நடுவிழா என விளம்பரம் செய்ய தேவையில்லை.

இம்மரங்களின் கன்றுகள் அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கும். இவற்றை வாங்கி நட்டுவிட்டு நீர்விட்டீர்கள் என்றால் சில நாட்களில் துளிர்த்துவிடும்.

தினமும் சென்று தண்ணீர் ஊற்ற சிரமமா? தென்னை நார்களை மரகன்றின் அடியில் போட்டு நீர் ஊற்றுங்கள் மூன்று நாட்களுக்கு இது தாங்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஊற்றுங்கள். இப்படி இரு வாரங்கள் பார்த்தால் போதுமானது. பிறகு அந்த கன்று மரம் ஆகும் வரை தன்னை தானே பார்த்துக்கொள்ளும்.

இதற்கும் சிரமம் இருந்தால் மற்றொரு யோசனை இதோ.

பெரிய மரங்களின் கன்றுகளை வாங்கி சிறிய தொட்டியில் வளர்த்துங்கள். வீட்டின் உள் அறையில் கூட வளர்த்தலாம், அல்லது விட்டின் முன்புறம் அழகு செடிபோல வளர்க்கலாம். அதிகபட்சம் 8 முதல் 10 மாதங்களுக்குள் நன்கு வளரும். பிறகு அந்த செடியை வேறு நிலபகுதியில் வைத்துவிட்டு, அதே தொட்டியில் அம்மரத்தின் புதிய கன்றையோ அல்லது வேறு மரத்தின் கன்றையோ வளர்த்தலாம். இம்முறை வீட்டிலும் உங்கள் அலுவலக சூழலிலும் பின்பற்றலாம்.

இவ்வாறு செய்வதால் மரங்கள் பெருகுவதும், நம்மை சுற்றி நல்ல ப்ராணன் இயங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். நான் வேலை செய்யும் சூழல் குளிரூட்டபட்ட இடம், அதில் மரம் வளர்க்கலாமா என கேட்டால், மரத்தை சிரமப்படுத்தாதீர்கள் என கூறுவேன். நீங்களும், மரமும் ப்ராணன் அமுங்கிய நிலையில் குளிரூட்டபட்ட அறையில் இருப்பதை நினைக்கவே மனம் கலங்குகிறது.

உங்களுக்கும் மரம் வளர்க்க வேறு யோசனை இருந்தால் சொல்லுங்களேன்.

அடுத்து பசு. பசுவிற்கு ப்ராணன் அதிகம் என்றேன். ஆனாலும் அவற்றை நகரத்தில் வளர்த்துவது சிரம் அதிகம் உண்டு. பசுவை காருடன் (மகிழுந்து-car) ஒப்பிட்டு நோக்கினால் சில விஷயங்கள் புரியும்.

இரண்டுக்கும் நான்கு கால் இருக்கு என அபத்தமாக ஆரம்பிக்க வேண்டாம் :)

நம் வீட்டில் கார் நிறுத்த இடம் இல்லை என்பதாலும், அப்பார்ட்மெண்டில் வசித்தாலும் கார் வாங்காமல் இருக்கிறோமா? அது போல நமக்கு விருப்பம் இருந்தால் பசு வாங்கலாம். சில நண்பர்களுடன் இணைந்து பசுவும், காளையும் வாங்கி ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம்.

கார் வாங்கி அவற்றை பொதுவான பார்க்கிங்கில் நிறுத்துகிறோம் அல்லவா அது போலத்தான். பொது பார்க்கிங்கிற்கு மாதம் சில ரூபாய் செலவிடுகிறோம். அத்தொகை ஒரு பசுமாட்டை பராமரிக்க போதுமானது.

அவற்றை பராமரிக்க ஒருவரை நியாமிக்கலாம். ஒரு 6 மாதம் முதல் 8 மாதம் வரை இவற்றிற்கு செலவு செய்தால் பிறகு பசுமாடு தன்னையும் தன் கூட்டத்தையும் பராமரிக்கும் செலவை சம்பாதிக்கும். அதன்மூலம் கிடைக்கும் பால் மற்றும் இதர விஷயங்கள் உங்களுக்கு உபரியாக கிடைக்கும்.

கார் வாங்கி சில வருடங்கள் கழித்து மற்றொரு கார் கிடைக்குமா? ஆனால் பசுவாங்கினால் சில வருடங்களில் பல்கிபெருகும்.

சுத்தமாக பராமரித்தால் பசுமாட்டிற்கு நல்லது. எந்த மாநகராட்சியும் இதற்கு தடை சொல்லாது. பசு மாடு கறவை முடிந்தாலும் அதில் ப்ராணன் உண்டு என்பதால், பால் கொடுக்காவிட்டாலும் பசுவால் பயன் உண்டு.

பசுவை உண்ணுவது தவறு என சொல்லும் அளவிற்கு நான் வள்ளலாரின் வழிவந்தவன் அல்ல. ஆனால் உயிர்வதை என்பதை கொண்டாலும், ஒரு உயிர்வதை செய்வதால் நம் உடலில் ஏற்படும் சில ப்ராண தடுமாற்றத்தையும் கருத்தில் கொண்டு தவறு என்கிறேன்.

சிலர் கேட்கிறார்கள் பசுமாடு இயற்கையாக இறந்து யாராவது பார்த்து இருக்கிறார்களா என்று, குரங்கின் இயற்கையாக இறந்த உடலை கூடத்தான் யாரும் பார்த்ததில்லை. அதற்காக குரங்கு சாப்பிடுபவர்கள் அதிகம் என கூறமுடியாது.

அடிமாடிற்கு பசுவை அனுப்புவது தவறு. ஆடு போல இறைச்சிகாக வளர்த்தி கொல்லுவது கூட அனுமதிக்கலாம். பசுவை கேரளாவில் எப்படி இறைச்சிக்காக வெட்டுகிறார்கள் என நேரில் ஒருமுறை பார்த்தால் அசைவம் சப்பிடுபவர்களுக்கும் மன நிலை தடுமாறும். பசுவின் இறைச்சி மென்மையாக இருக்க வேண்டும் என்று அவற்றை பயமுறுத்தி, பசு இருக்கும் அறையில் பட்டாசு வெடித்து அவற்று மிரள செய்து வெட்டுவார்கள்.

அதன் இரத்தம் சூடாகி, இருதயம் படபடப்புடன் இருக்கும் பொழுது வெட்டினால் இறைச்சி மிகவும் மென்மையாக இருக்குமாம். நினைத்துபாருங்கள் உங்கள் விரோதிக்கு இப்படி பட்ட சாவு வந்தால் கூட அனுமதிக்க மாட்டீர்கள் தானே?

தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அடிமாடாக செல்லும் காட்சியக் காணும் நகரத்தில் நான் வசிப்பது நான் எப்பொழுதோ செய்த பாவம்தான். பல நல்லுள்ளங்களின் உதவியுடன் கறவை முடிந்த பசுவையும், முதிர்ந்த காளைகளையும் பராமரிக்கும் கோசாலையை சிலர் கோவையில் ஏற்படுத்தியுள்ளனர். கோவையை விட்டு சில கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தில் இந்த சூழல் இருக்கிறது. சில நூறு மாடுகள் பராமரிக்கபட்டு வந்தது. அடிமாடுகளாக சென்ற பாதிமாடுகள் இதில் அடக்கம். இதில் கொடுமை என்ன வென்றால் சில மாதங்களுக்கு முன் இதிலிருந்து மாடுகளை சிலர் களவாடி சென்று இறைச்சியாக்கிவிட்டார்கள்.

பிற உயிர்களை துன்புறுத்தி நம் உயிரை களங்கப்படுத்தாமல், நமக்கும் இயற்கைக்கும் நன்மை கொடுத்து வாழும் வாழ்க்கைதானே வேதகால வாழ்க்கை?

நான் வேதகால வாழ்க்கை பற்றி கூறுகிறேனே நான் வேதகால வாழ்க்கை முறைக்கு என்ன செய்தேன் ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(......வேதம் ஒலிக்கும்)

Friday, November 13, 2009

வேதகால வாழ்க்கை பகுதி - 11

ப்ரபஞ்ச சக்தி பல தாவரங்கள் வழியாகவும், பசுவின் வழியாகவும் மனிதர்களுக்கு ஊடுருவுகிறது என்பதே நான் முன்பு சொன்ன கருத்து. இவை இரண்டும் இல்லாத சூழலில் மனிதனின் மனம், உடல் மற்றும் ஆன்மா நிலைதடுமாறிய நிலையிலேயே இருப்பான். தாவரம் இல்லாத சூழலில் வாழமுடியாத காரணத்தால் அவன் வாழும் சூழலில் இருக்கும் சில தாவரங்கள் மனிதனுக்கு தேவையான குறைந்தபட்ச ஆற்றலை கொடுத்துக் கொண்டிருக்கும். யானைபசிக்கு சோளப்பொறி போல மனிதனுக்கு தேவையான ஆற்றலில் இவை சில துளிகளே. இயற்கையாக விளைந்த தாவரங்கள் இருக்கும் சூழலில் மனிதன் இருக்கும் பொழுது அவனுக்கு பூரணமான ப்ராணன் நிலைகொள்வதால் மனம், உடல் மற்றும் ஆன்மாவில் ஏற்றம் பெறுகிறான்.

நம் மக்களுக்குள் எப்பொழுதும் ஒரு பகுத்தறிவாளி ஒளிந்திருப்பார். எல்லாவற்றிற்கும் சான்று கேட்கும் அந்த விஞ்ஞானி மேற்கண்ட வரிகளுக்கும் கேட்கலாம். விஞ்ஞான கருவிகளைக்காட்டிலும் நம் வாழ்க்கை சம்பவங்கள் துல்லியமானது.

அவற்றை சான்றாக பார்ப்போம். நீங்கள் சுற்றுலா செல்லுகிறீர்கள் என கொள்வோம். நீர் விளையாட்டுக்கள் உள்ள இடம், எழில் மிகு கட்டிடங்கள் உள்ள இடம் ஆகியவற்றிற்கு செல்லுவதற்கும், வனங்களில் சுற்றுலா செல்லுவதற்கும் சில வித்தியாசம் உண்டு அல்லவா?

வனப்பிரதேசத்தில் சில நாட்கள் உலாவி வந்தால் மனதில் இனம் புரியத நிறைவு வருகிறது அல்லவா? நீர் கேளிக்கை பூங்காக்களில் ( water theam park) எத்தனையோ விளையாட்டால் வராதா ஒரு நிறைவு ஏன் வனத்தில் வருகிறது?

காரணம் வனங்களில் இயற்கையாக அமைந்த ப்ராண ஆற்றல்கள்தான். ப்ராண சக்தி முழுமையாக இயங்குவதால்தான் வனங்களில் உயிர்களில் உருவாக்கமும் வளர்ச்சியும் தடைபடாமல் இருக்கிறது. மனிதன் ப்ராணனால் பூரணத்துவம் அடைகிறான் என்பதை இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

திருப்பூரில் இருக்கும் அன்பர்கள் கோவை வந்தால் ஒருவித புத்தணர்ச்சி அடைவார்கள். இதன் காரணம் திருப்பூரைவிட கோவையில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகம். இக்கருத்தை படிக்கும் திருப்பூர் ’வாசி’கள் கருத்து கூறினால் தன்னியனாவேன்.

இயற்கையாக வனங்கள் ப்ராண சக்தியை பிரபஞ்சத்திலிருந்து எளிமையாக மாற்றம் செய்கிறது. ஆனால் செயற்கையாக உருவாக்கும் மரங்கள் முழுமையாக செயல்படுவது இல்லை. வனத்தில் உலாவருவதற்கும் பூங்காவில் உலாவருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு அல்லவா?

செயற்கையாக நாமும் வனங்களை உருவாக்கலாம். நம் வீட்டிலும் நமக்கு தெரிந்த இடங்களிலும் இவற்றை செய்ய முடியும். அதற்கு நம்மிடையே ப்ராண சக்தியை முழுமையாக கொடுக்கும் மரங்கள் எவை தெரிந்திருக்க வேண்டும்.

ப்ரபஞ்ச சக்தியை முழுமையாக உள்வாங்கி ப்ராணனாக மரங்கள் மாற்றி அளிக்கும் சக்தி கேந்திரம் அல்லவா?

அத்தகைய ப்ரபஞ்ச ஆற்றல் எங்கிருந்து வருகிறது? காஸ்மிக் கதிர்கள் என்பது நம் ப்ரபஞ்சத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வருகிறது.

நட்சத்திரம் மண்டலம் என்பது 27 வகையான நட்சத்திர கூட்டங்கள். பிரபஞ்சத்தில் வெறும் 27 நட்சத்திரம் மட்டும் அல்ல. நட்சத்திரங்கள் கோடிக்கனக்கான அளவில் இருந்தாலும் அவற்ற 27 வகையாக வரிசைப்படுத்தலாம். ( ஒன்பது கிரகங்கள் அதன் மூன்று குணங்கள் : 9X3= 27)

நட்சத்திர ரீதியாக சாஸ்திரத்தில் பிரிக்கப்பட்ட விருட்சங்களில் பட்டியல் இந்த சுட்டியில் உண்டு.

நட்சத்திர விருட்சங்களை இயற்கை வேளாண்மை முறையில் வளர்த்தால் மட்டுமே செயல்படும். அவ்வாறு வளர்க்க பஞ்சகவியம் மற்றும் ப்ராண சக்தியை ஊட்டும் செயலுக்கும் பசு மாடுகள் அவசியம்.

1980க்கு முன் நம் நாட்டில் விவசாயிகள் அனைவரும் பசுவை பயன்படுத்திவந்தனர். அதனால் விவசாயம் செழிப்பாக இல்லாவிட்டாலும் தேவையான அளவு கிடைத்துவந்தது. பசுவையும் காளையையும் ஒழித்து, டிராக்டர், பூச்சிகொல்லி ரசாயனம் என துவங்கியதும் இன்று தேவையான உணவு பொருட்கள் கிடைக்காத தட்டுப்பாட்டில் இருக்கிறோம்.

இங்கே முக்கியமான ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன். இரும்பு என்ற உலோகம் ஒரு கடத்தி மற்றும் ப்ராணனை நம் உடலை விட்டு வெளியேற்றும் ஒரு தாது. வரலாற்று அறிஞர்களில் காலகணக்குபடி இரும்பு,செம்பு, தங்கம் என உலோகத்தை வைத்து மனிதனின் சமூக காலத்தை கண்டறிகிறார்கள். இரும்பு பயன்பாடு மனிதனுக்கு தெரிந்து இருந்தும் விவசாயத்தில் நேரடியாக நிலத்திற்கும், விதைகளுக்கும் தொடர்பு கொள்ளும் பொருட்களை அவன் இரும்பால் உருவாக்கவில்லை கவனித்தீர்களா? உழுவதற்கு ஏர் மரத்திலும், விதைகலயங்கள் மண் மற்றும் மூங்கில் கூடையாகவும் பயன்படுத்தினார்கள். மூங்கில் கூடையிலும் சாணம் மொழுகப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க...!

நம் உடலில் மின்சக்தி உண்டு என்பது தெரியும். விதை மற்றும் மண்ணில் உள்ள மின்சக்தியும் அயனியாக்கமும் நம் கைகளில் அவற்றை தொடுவதன் மூலம் பாதிப்படையும். விளைச்சல் குறையும். உலோகங்கள் கடத்தி என்பதால் விவசாயத்திற்கு அதிகமாக கடத்திகளை பயன்படுத்துவதில்லை.

தற்காலத்தில் டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் அனைத்து கலயங்களும் இரும்பில் இருக்கிறது.

ஜோதிடத்தில் இரும்பை சனி என்ற கிரகம் குறிக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் தற்கால விவசாயத்திற்கு ‘இரும்பு’ பிடித்துவிட்டது.

ஆஸ்திரேலிய விவசாயிகள் மர சக்கரம் மற்றும் மர கலப்பை கொண்ட டிராக்டரை பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள். பசுவையும் காளையும் வைத்து மர கலப்பையில் விவசாயம் செய்தவன் முட்டாளா? நீங்கள் முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.

நான் அப்பார்மெண்டில் வசிக்கிறேன் மரமும், பசுவும் என்னால் வளர்க்க முடியுமா?
நகரத்தில் பசு வளர்க்கும் வசதி உண்டா?
பசுவினால் உலகம் வெப்பமடைதல் ஆகிறதாமே?
பசுவினால் கேடு ஏற்பட்டு உலகம் அழியும் அபாயம் உண்டா?
பசுமாட்டை உபயோகம் முடிந்ததும் இறைச்சிக்காக வெட்டுகிறார்களே?

போன்ற கேள்விகளுக்கு அடுத்த பகுதியில் விளக்கம் பார்ப்போம்.


(....வேதம் ஒலிக்கும்)

டிஸ்கி : கடந்த சில தினங்கள் ஸ்ரீசக்ர புரியில் இருந்ததால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. எங்கள் ஸ்ரீசக்ர புரி பயணம் சிறப்பாக அமைந்தது. அதில் ஒரு பிரபல பதிவர் எங்களுடன் கலந்துகொண்டு எங்கள் பயணத்தை சிறப்பித்தது குறிப்பிடதக்கது. அதைபற்றிய கட்டுரை சுப்பாண்டி வாயிலாக விரைவில் வெளிவரும். :)

Friday, November 6, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 10

வேதகால வாழ்க்கை என்பதில் மூன்று இயற்கை உயிர்கள் சுழற்சி முறையிலும் ,பரஸ்பரமும் பகிர்ந்து வாழ்ந்தல் அவசியமாகிறது. பிரபஞ்ச சக்தியை முழுமையாக மரங்கள் பெறுவதற்கு மரங்கள் மிகவும் ஊட்டச்சத்துடன் வாழவேண்டும். மரங்களின் ஊட்டத்தை பெறுக்க பசுவின் மூலம் ஏற்படும் பஞ்சகவ்யம் மிகவும் தேவையான ஒரு விஷயம்.

பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணம், சிறுநீர், பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவையாகும். பஞ்சகவ்யம் இருந்தால் தான் மரம் வளரும் என்பது அல்ல. மரங்கள் செறிவுடன் மிகவும் திறன்வாய்ந்த ப்ரபஞ்ச ஆற்றல் மையங்களாக இருக்க இந்த ஊட்டம் தேவைபடுகிறது. பசு மிகவும் ஆற்றல் வாய்ந்த ப்ராண கேந்திரம் என தெரிந்துகொண்டோம்.

அது போல பஞ்சகவ்யத்தை கொண்டு வளர்ந்த மரங்கள் பசுவுக்கு இணையான ஆற்றல் ஏற்படுத்துகிறது. காரணம் மரம் தனது உயிர் சக்தியை பசுவின் ஆற்றல் மூலமே பெறுகிறது. இவ்வாறு வளர்க்கபட்ட தாவரங்கள் பசு இவை அனைத்தும் சமமான சக்தியை கொண்டு நம்மை சுற்றி பல சக்தி மையங்களை ஏற்படுத்தும்.

தொடர்ந்து தடையில்லாத பிரபஞ்ச சக்தி நம்மில் ஊடுருவ வாழ்ந்துவந்தால் வேறு என்ன நமக்கு வேண்டும்?

பஞ்சகவ்ய பொருட்களை நான் பட்டியலிட்டவுன் அதில் அப்படி என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். பஞ்சகவ்யம் என்பது மரத்திற்கு போடும் உரமாகவும், ஊட்டமளிக்கும் தாவர உணவாகவும் பார்க்கப்படுகிறது.

உண்மையில் பஞ்சகவ்யம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஊட்ட சத்து. மனிதர்களுக்கு ஆயுர்வேதத்தில் சக்தியை பெற மருந்தாக வழங்கப்படுகிறது. என்னது பசுவின் சிறுநீரும், சாணமும் மருந்தா என நீங்கள் நினைக்கலாம். ஆம் மருந்து தான். அதுவும் சரிவிகிதத்தில் பசுவினால் கிடைக்கும் பொருட்களை கலந்தால் அவை உயிர்சக்தியை வளர்க்கும் ஒரு அருமருந்து.

பஞ்சகவ்யத்திற்காக தனியாக பசுமாடு வளர்க்கப்பட வேண்டும். இப்பசு ஒரு முறை மட்டுமே கன்று ஈன்றதாக இருக்க வேண்டும். அடுத்த முறை கன்று ஈன்றால் அவற்றை தவிர்த்து புதிய பசுவை பயன்படுத்த வேண்டும். பஞ்சகவ்யத்திற்காக பயன்படுத்தப்படும் பசுக்கள் புல் மற்றும் இயற்கையாக வளர்ந்த தாவரத்தை மட்டுமே உண்ண வேண்டும் என பஞ்சகவ்யம் தயாரிக்கும் பசுவை தயாரிக்கவே கொஞ்சம் சிரமம் எடுக்க வேண்டும்.

பஞ்சகவ்யம் தயாரிக்க என்றவுடன் ஒரு வாளியை எடுத்து ஒரு வாளி சாணம், ஒரு வாளி சிறுநீர் என அளந்து கலக்கிவிடக்கூடாது. பஞ்சகவ்யம் கலப்பதற்கு என சில விகிதாச்சாரம் உண்டு. மேலும் பஞ்சகவ்ய பொருட்களுடன் உபகவ்யம் என்ற வெல்லம், துளசி மற்றும் வேப்ப எண்ணெய் இவற்றையும் கலந்து பயன்படுத்த வேண்டும்.

தற்கால விவசாயிகள் பசுமை புரட்சி என்ற பெயரில் 1985 முதல் ரசாயன உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுற்றச்சூழல், தாவரம் மற்றும் மண் தன் தன்மையை இழந்துவருகிறது. இவை நேரடி பாதிப்புகள். இது தவிர ரசாயனம் இருக்கும் விளைநிலத்தில் ப்ராண சக்தி பரவுவது தடுமாற்றம் ஏற்படுகிறது. ப்ராண சக்தி புலம் மிகவும் குறுகிவிடுகிறது. இத்தகைய விளைநிலங்களில் வளரும் உணவு பொருட்களை உண்பதால் நம் உடலில் ப்ராணனில் அளவும் மிகவும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

பசுமை புரட்சிக்கு பின் புற்றுநோய் ஏற்படுவதன் அளவும், குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது. நீலகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் பயணிக்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியான ஒரு சூழலை சந்தித்தேன். அந்த கிராமத்தின் ஓவ்வொரு வீட்டிலும் ஒரு புற்றுநோயாளி இருக்கிறார். அவர்களுக்கு புற்றுநோய் பற்றி சரியாக தெரியவில்லை. கிராம ஆர்வலருடன் நான் சென்று அவர்களை சந்தித்தேன். தற்சமயம் அவர்கள் சற்று புற்றுநோய் பற்றிய விஷயங்கள் தெரிந்து வாழ்கிறார்கள்.

அவர்களுக்கு புற்று நோய் வரக் காரணம் என்ன தெரியுமா? தேயிலை தோட்டத்தில் தெளிக்கும் ரசாயன உரங்கள் மண்ணில் கலந்து தோட்டத்தின் அருகில் இருக்கும் ஓடையில் சங்கமிக்கிறது. அந்த ஓடை நீரைத்தான் அந்த கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். யாரோ செய்யும் ரசாயன உர வியாபரத்தாலும், விவசாயத்தாலும் ஒரு கிராமமே பாதிக்கப்பாட்டுள்ளது.

உண்மையில் அந்த கிராம வாசிகள் போல நாமும் ஒருவிதத்தில் பாதிக்கபட்டு இருக்கிறோம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்த உணவு பொருட்கள் வேண்டும் என கேட்கிறார்கள்.

ஆனால் நாம் பல கப்பல்களில் ரசாயனத்தை இறக்குமதி செய்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ரசாயன உரத்தால் கொல்வதற்கு பதில் ஒரு அணுகுண்டை அவர்கள் நம்மீது ஏவினால் சந்தோஷப்படுவேன்.

இதுவே இயற்கை முறையில் பஞ்சகவ்யம் மற்றும் இதர இயற்கை முறை விவசாயம் செய்தால் இப்படி பட்ட நிலை இல்லை. ஆரோக்கியமான மற்றும் இயற்கையான வாழ்க்கைக்கு பசுவும், இயற்கை விவசாயமும் அவசியம் ஆகிறது.

ரசாயன உரம் அவ்வளவு கொடியதா என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம். ஒரு விவசாயி ரசாயன உரத்தை தாவரங்களுக்கு தெளிக்கிறார், அப்படி தெளிக்கும் நேரத்தில் ஒரு கைப்பிடி அந்த உரத்தை எடுத்து சாப்பிட்டால் என்ன ஆவார்?

ஆனால் பஞ்சகவ்யத்தை ஒருவர் பயிருக்கு செலுத்தும் பொழுது அதை ஒரு கைப்பிடி எடுத்து உண்டாலும் ஒன்றும் ஆகமாட்டார். மாறாக நல்ல உடல் நலமும் , ஆன்ம பலமும் பெறுவார்.

தாவரங்கள் நம்மை விட அதிக பலம் கொண்டவை என்பதற்கு இந்த உதாரணம் மிகவும் பொருந்தும். விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை தெளித்தாலும் மனிதனை போல் உயிர்விடாமல் அதற்கு எதிராக போராடி உயிர்பெறுகிறது தாவரம். தாவரங்களை ஒரு உயிராக பார்க்காமல் வியாபார பொருட்களாக பசுமை புரட்சியாளர்கள் பார்த்தார்கள். அதன் விளைவு நீங்களும் நானும் தரமான விவசாய பொருட்கள் கிடைக்காமலும், கொள்ளை விலையில் அரிசியையும் பருப்பையும் வாங்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை போன்ற ஒரு உயிர் என விவசாயி நினைத்தால் அன்று முதல் தன்னையே தியாகம் செய்ய தாவரங்கள் தயாராகாதா? விவசாயிக்கு ஏற்படும் இந்த எண்ணம் தானே தாவரத்திற்கு தேவையான முக்கிய ஊட்டசத்து? ரசாயனத்தை கொடுத்ததற்கு பன்மடங்கு அந்த தாவரம் திரும்ப நமக்கு என்ன கொடுத்தது என நடைமுறையில் காண்கிறோம். இது மாற்றத்திற்கான நேரம்.


வேதகால வாழ்க்கை முறையை எளிமையாக விளக்கும் ஒரு படம்.

இப்படத்தில் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். தாவரமும், பசுவும் பரஸ்பரம் கொடுத்துக்கொள்கின்றன. ஆனால் மனிதன் பெற மட்டுமே செய்கிறான்.

ப்ராண சக்தியின் நிலையில் இருந்து பார்த்தால் தான் பெரியவன் என்ற மனித அஹங்காரம் நொருங்கிவிடும். எல்லா மரங்களும், பசுக்களும் வேதகால வாழ்க்கை சுழற்சிக்கு பயன்படுத்த முடியுமா என்றால்....

இல்லை என்றே கூறவேண்டும்.

புளிய மரம் போன்றவை ப்ராணனை குறைக்கும் என்று கூறினேன் அல்லவா? அப்படியானால் எவை பயன்படுத்த தகுந்தவை? அடுத்த பகுதியில் பார்ப்போம்

(.... வேதம் ஒலிக்கும்)

Wednesday, November 4, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 9

உயிரினங்களில் பல வகை இருந்தாலும் சில வகை உயிர்களுக்கு மட்டும் பிரபஞ்ச ஆற்றலை உள்வாகும் சக்தி அதிகம். பசுவகைகள் அனைத்துக்கும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் சக்தி அதிகம். இது மாட்டினம் மற்றும் எருமை இவை அனைத்துக்கும் பொதுவானது.

பசு நமக்கு என்ன கொடுக்கிறது என கேட்டிருந்தேன். உண்மையில் பசு நமக்கு பால், சாணம் கொடுக்கிறது என கூறி இருந்தீர்கள். பசு நூறு மரத்திற்கு சமம் என கூறி பின்னும் பால் சாணம் கொடுக்கும் ஒரு விலங்காகவே இதை பார்த்தால் என்ன செய்வது?


பிரபஞ்ச ஆற்றல் மரங்கள் மேல் இறங்கும் பொழுது அவ்வாற்றலை ப்ராண சக்தியாக மாற்றுகிறது அல்லவா? இது 1:1 என்ற விகிதத்தில் தான் மாற்றும். ஆனால் பசுக்கள் 1:100 என்ற விகிதத்தில் மாற்றம் செய்யும்.

மனித மனம் எப்பொழுதும் சில விஷயங்களை ஒரே வரிசையில் சிந்திக்கும். ஒரு மனிதன் ரோஜாப்பூவில் இருந்து தனக்கு ஒரு ஆற்றல் கிடைக்கிறது என நினைத்தால் முதலில் அவற்றை கடித்து தின்று ஜீரணம் செய்வான். மனிதன் ஜீரணம் மூலமே உடல் சக்தி பெற முடியும் என்ற எண்ணம் கொண்டவன். தற்காலத்தில் இருக்கும் நவீன மனிதன் வரை இது தொடர்கிறது.

சரியான யோக பயிற்சி (ப்ராணாயமம்) மூலம் உடல் சக்தியை பெற முடியும். உணவு மற்றும் நீர் அருந்துவதால் உடலில் கிடைக்கும் வலிமையை அவ்வாறு உணவு உற்கொள்ளாமலேயே இவ்வகை பயிற்சிகள் கொடுக்கும். தாவரத்தில் இருக்கும் உயிர்சக்தி நம் உடலில் உணவாக சென்று ஜீரணம் நடைபெற்று பின்பு உடலில் சத்தாக மாற்றம் அடையும் நீண்ட வழிமுறையை மாற்றி நேரடியாக உயிர்சக்தியை பெறும் ஆன்ம பயிற்சிகளை செய்பவர்கள் பலர். இவர்களை யோகிகள் என்பார்கள்.

சராசரி மனிதன் இப்பயிற்சி செய்வது கடினம். அவனுக்கு பிற வாழ்வியல் விஷயங்கள் இருப்பதால் மரம் மூலமும் பசு மூலமும் தான் உயிர்சக்தியை பெற முடியும். தாவரங்களில் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும், பசுவின் வாழ்நாள் மற்றும் இனபெருக்கத்திற்கும் மிக வித்தியாசம் உண்டும். பசுவின் வாழ்நாளும், இனபெருக்க அளவும் தாவத்தை விட குறைவு. அதனால் மனிதன் பசுவை பயன்படுத்தினாலும் நீண்டகாலம் அதன் மேம்பாட்டை அனுபவிக்க முடியாது.

குறைந்த காலமே வாழ்ந்தாலும் பசு மரங்களை விட அதிகமான நன்மைகளை நமக்கு தருகிறது என்பதும் உண்மை.

ப்ராண சக்தி ஐந்து விதமான உட்பிரிவு கொண்டது என பார்த்தோம். அது போல ப்ராண சக்தியை வெளிப்படும் தாவரம் மற்றும் பசு இவைகள் வெளிப்படுத்தும் செயல்களும் ஐந்து தன்மையை சார்ந்தே இருக்கிறது.

இலை, தண்டு, கிளை, பூ, கனி என தாவரமும், சாணம்,சிறுநீர்,பால், தயிர் மற்றும் நெய் என பசுமாடும் தங்கள் செயலால் ப்ராணனை அடையாளப்படுத்துகிறது. தாவரம் மற்றும் பசு கொடுக்கும் ஐந்து பொருட்களை உண்டு வாழ்ந்தால் மனிதன் ப்ராண சக்தியை பெறமுடியும் என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் தாவரம் மற்றும் பசுக்களுடன் இணைந்து வாழ்ந்தாலே போதுமானது. அவை கொடுப்பதை உண்ண வேண்டும் என கட்டாயம் இல்லை. இது தான் வேதகால ரகசியம்.
இராமேஸ்வரத்தில் பின்புறம் வழிபட பூஜா ஸ்டேண்டுடன் நிற்கும் பசு. :)

சிலர் பசுவை உண்பது பாவம் என்றும் சிலர் உண்ணலாம் தவறில்லை என்றும் வாதம் செய்கிறோம். அவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம். பசு மனிதகுலத்திற்கு நன்மை கொடுக்கிறது என நினைப்பதால் தான் சிலர் உண்ணக்கூடாது என்றும், உணவாக உற்கொண்டால் உடல் பலம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள். உண்மையில் பசுவின் உடலில் ஒன்றும் இல்லை. பசு பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி வெளியிடும் தன்மை மட்டுமே அதன் உடல் செய்கிறது. இவ்வாறு செய்யும் உடல் பகுதிகள் பசுமாட்டிடம் மட்டுமே உண்டு, காளையில் இல்லை.

இதை உணராமல் சிலர் பசுவை பின்பக்கமாக வழிபடுவது, சிலர் வெட்டி விழுங்குவதும் வேடிக்கையான விஷயம் அல்லவா?. ATM மிஷினில் பணம் கிடைக்கிறது என்பதற்காக அந்த மிஷினே பணம் அச்சடிக்கிறது என நினைக்கும் அறிவிஜீவிகள் இவர்கள். மிஷினை விடுங்கள் வங்கியை பாருங்கள்..!

தோடர்கள் என்ற பழங்குடியினம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் நீலகிரி மற்றும் தென் கர்நாடகவில் வாழும் ஒரு பழங்குடியினர். இவர்கள் எருமையை தெய்வமாக வணங்குகிறார்கள். எருமையை கொல்லுவது மற்றும் அவற்றை கொண்டு உழுவது என அனைத்தும் பாவம் என்பது இவர்களின் வாதம். மண்ணை கூட தோண்ட மாட்டார்கள் காரணம் மண் என்பது தாய்க்கு சமம் என்பது இவர்களின் எண்ணம். தாவர உணவை உண்டு வாழும் உலகின் ஒரே பழங்குடியினர் என இவர்களை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள் தாவரத்திலிருந்து ஆற்றலை பெறுவதற்கும் எருமை பசுவின் மூலம் வழிபாடு செய்வதற்கும் கற்று வைத்திருக்கிறார்கள்.
ஊட்டி தோடர்கள் இயற்கை கோவில் முன்புற தோற்றம்

பசுவை வழிபடுங்கள் என நான் கூறவில்லை. மரங்களை வழிபடுங்கள் என்றும் கூறவில்லை. காரணம் வேதகால வாழ்க்கை என்பது வழிபாடு,மதம் மற்றும் இனத்தை தாண்டிய விஷயம்.

பிற இயற்கை உயிர்களாகிய பசு மற்றும் தாவரத்திற்கும் உங்கள் வாழ்க்கை முறைக்கும் தொடர்பு உண்டு அதனால் அதை மதியுங்கள் என கூறுகிறேன்.

அதனால் தான் இந்த பகுதி ஒன்பது வரை எந்த மதம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தும் நான் வேதகால வாழ்க்கையை விளக்கவில்லை.இனி வரும் காலத்தில் மனிதன், பசு மற்றும் தாவரம் இவை மூன்றும் இணைந்து எப்படி வேதகால வாழ்க்கை முறையாகிறது என பார்ப்போம்.

(...வேதம் ஒலிக்கும்)

Monday, November 2, 2009

வேதகால வாழ்க்கை பகுதி 8

நவீன நாகரீகம் என்றதும் முதலில் மனிதன் விலக்கியது பசுவுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவைத்தான். சாணத்தை ஒரு அசிங்கமான பொருளாக பார்க்கும் இளைஞர்களை பார்க்கிறோம். நகரத்தில் பசுமாடுகள் வளர்த்த தடையை பல மாநகராட்சிகள் வைத்துள்ளது. பசுவின் எண்ணிக்கைகள் பல நாடுகளில் குறைந்து வருகிறது. இதனால் மனித நேயம் குறைவது, மனசிதைவு, இயற்கை மேம்பாடு என பல விஷயங்கள் பாதிக்கப்படும். இது என்ன பட்டாம்பூச்சி விளைவா என கேள்வி எளலாம். பசு ஒரு நடமாடும் சக்தி கேந்திரம்.

பசு என்று தான் சொல்லுகிறேன் கவனியுங்கள். மாடு என சொல்லவில்லை. மாடு என்பது இனம், பசு என்பது அதில் ஓர் வகை. உலகின் எந்த நாகரீகத்தையும் கவனித்தால் அதில் பசு என்பது முக்கியமான விஷயமாகும். பசுவில்லாத மனிதகுலம் தோன்றாது. காரணம் பசு என்பது தாய்க்கு சமம் என்பார்கள். இது பால் கொடுப்பதாலோ அல்லது பாசத்துடன் இருப்பதாலோ அல்ல. பசு என்பது தோற்றத்தின் அடிப்படை.

பசு ஒரு வீட்டு விலங்கு என்று படித்திருப்போம். உண்மையில் பசு என்பது வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ அல்ல. பசு யாரையும் சாராமல் வாழும் ஒரு உயிர். ஒரு நாய் அல்லது வேறு ஒரு உயிரை நீங்கள் செல்லப்பிராணியாக வளர்த்து பின்பு அதை வீட்டை விட்டு விரட்டினால் அது சில நாட்களில் உயிர் விடும். காரணம் அதற்கு உணவு சேகரிக்க தெரியாது. ஆனால் பசு மட்டும் தன் வாழ்க்கையை செம்மையாகவே வைத்திருக்கும். பெரிய வித்தியாசம் இருக்காது.

உலக கலாச்சாரம் என நவீன ஆய்வாளர்கள் கூறும் எகிப்து, ஹரப்பா மற்றும் மாயன் ஆகியவற்றின் குகை ஓவியங்களிலும் , சிதைந்த சுவடுகளிலும் பசுவின் ஓவியங்களை காண முடியும். மனிதன் பசுவின் பாலை குடிப்பதால் மட்டுமே அதன் மேல் கவரப்பட்டு சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைய முடியுமா என்பது சிந்திக்க வேண்டும்.

பசு என்பது நம் ஊரில் பார்ப்பது மட்டும் பசு கிடையாது. பசுவில் பல்வகை உண்டு. ஆனாலும் பசுவினால் ஏற்படும் பயன்கள் ஒன்றுபோலவே இருக்கும். சிந்து சமய நாகரீகம் மற்றும் கிரேக்கம் ஆகியவற்றில் பசுவின் முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. இன்றும் கூட ஐரோப்பிய பசுக்கள் உலக அளவில் பெயர் பெற்றவை.

பாரத தேசத்தில் மட்டும் அல்ல பல தேசங்களில் மக்கள் வழிபட்ட ஆதாரங்கள் பசுவுக்கு
வேதகால வாழ்க்கையின் மற்றொரு அங்கம் பசு. நான் முன்பு தாவரங்களை பற்றி விளக்கினேன் அல்லவா? அது உங்களுக்கு புரிந்திருந்தால் பசுவை பற்றி புரிந்து கொள்வது எளிது. இதோ அதை எளிமையான சமன்பாட்டில் கூறுகிறேன்.

ஒரு பசு = 100 மரம்

பசு நம் உலகிற்கு என்ன தருகிறது என நான் கூறுவதற்கு முன்னால், பசு நமக்கு என்ன என்ன கொடுக்கிறது- என உங்களால் கூற முடியுமா?

(....வேதம் ஒலிக்கும்)