Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, November 27, 2011

திரிகுண ரஹஸ்யம்


தற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.


இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.


மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

மூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா?

(தொடரும்)
-------- ரஜோ குணம் / திரிகுணம் (1/3)--------

Friday, November 11, 2011

பழைய பஞ்சாங்கம் 11-11-11 @11.11

நல்உள்ளங்களுக்கு நன்றி

ஆன்மீக கல்வியை சிறந்த முறையிலும் பொருளாதார சுமை இல்லாமலும் கொடுக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என கேட்டிருந்தேன். சின்ன அளவில் கோரிக்கை வைத்ததற்கே பலர் உதவ முன் வந்தார்கள். அதன் சுட்டி இங்கே : உதவி

வெளிநாட்டிலிருந்து உதவி செய்த சிவப்பிரகாசம், ஞானவேல், வித்யா, கீதா, ஆனந்த் ஆகியோருக்கு என் பேரன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொருளாதார ரீதியாக உதவி செய்தவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் ஐரோப்பா, அமெரிக்காவில் பயிற்சி நடத்த வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்தியாவில் யாரும் பயிற்சி நடப்பதற்கோ அல்லது வேறு உதவிகளையோ இன்னும் செய்யவில்லை. மேலோட்டமாக விசாரித்ததுடன் சரி...!

உள்நாட்டில் இருப்பவர்களிடம் உதவி பெறும் யோகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன். இதற்காக நான் வெளிநாட்டில் வசித்து பிறகு இங்கே இருப்பவர்களிடம் உதவி பெறலாம் என நினைக்கிறேன்...!

பயிற்சி கொடுத்தால் கட்டணம் என்கிறார்கள். இலவசமாக கொடுத்தால் யாரும் அதற்கு உதவவில்லை... என்ன செய்ய? வள்ளலார் கடை விரித்தே கொள்வாரில்லை.. நான் எல்லாம் எம்மாத்திரம்..?
--------------------

பிணத்தீட்டு

திருவண்ணாமலைக்கு தென் திசை முழுவதும் சுடுகாடாக இருந்தது. இப்பொழுதும் அப்படித்தான். சுடுகாட்டிற்கு மத்தியில் தான் ரமணாஸிரமம் அமைந்திருந்தது. ஊரில் யாராவது இறந்துவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்பகுதிக்கு எடுத்து வந்து அவர் அவர் குல வழக்கப்படி எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள்.

அந்தகாலத்தில் வாகன வசதியில்லாததால் பிணத்தை சுமக்க சிலர் இருப்பார்கள். இவர்கள் ஈமக்கிரியை முடிந்ததும் ரமணாஸ்ரமம் வந்து இளைப்பாரிவிட்டு செல்வார்கள். ஒரு நாள் ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் இரண்டு வெளிநபர்களுடன் வாக்குவாதம் செய்வதை ரமணர் கண்டார். அவர்களுக்கு அருகே சென்று வெளிநபர்களிடம் என்ன என விசாரித்தார்.

தாங்கள் பிணம் சுமந்து வந்தோம், உச்சி வேளை என்பதால் மிகவும் களைப்பாக இருக்கிறது, உணவுக்கு ஆசிரமத்தில் மணி அடித்தார்கள். சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால் இவர் தீட்டு என எங்களை உள்ளே விடவில்லை என்றனர். ரமணர் அவர்களை சாப்பிட உடனே உணவு கூடத்திற்கு போகச் சொன்னார்.

பிறகு ஆசிரமவாசியிடம், “தினமும் நாம நம்ம உடம்புங்கிற பிணத்தை தூக்கிட்டு இருக்கோம். அதுவே தீட்டு தானே? நானும் நீயும் தீட்டான ஆட்கள் தான்” என்றார்.

-----------------------------------------------------------
அழகிய தமிழ் மகன்

சில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் ஒரு நிறுத்தம் வந்ததும், வெளியே சென்று சில நிமிடம் நிற்பதற்காக இறங்கினேன். மீண்டும் ரயில் கிளம்பும் பொழுது வண்டியில் ஏறுவதற்கு வாசல் படிக்கு அருகே சென்றால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

“எக்ஸ்க்கியூஸ்மீ...” என சொல்லிவிட்டு வழிவிடுவார் என நினைத்தால் அவ்வழியே அடைத்துக் கொண்டு கண்களை உருட்டி என்னை பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க தமிழில் பேசமாட்டீங்களோ?” என்றவரை கவனித்தால்... கலைந்த தலை, பலநாள் தாடி, நீல நிற ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட்டில் சேக்குவாரோ படம் என அவர் இருந்த நிலையை பார்த்ததும் இன்னைக்கு இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது.

“தமிழன் கிட்ட தமிழ்ல பேசுங்க.. அமெரிக்காவிலா இருக்கீங்க? தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கறதே உங்கள மாதிரி எக்ஸ்க்கியூஸ்மீ ஆட்கள் தான்..” என்றார்.

அதற்குள் ரயில் நகரத்துவங்கியது அதனுள் ஏறியபடியே அவருடன் பேசத்துவங்கினேன், “ஐயா, தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்களே... எந்த தமிழன் டீ-சர்ட்டும், ஜீன்ஸும் போட்டிருந்தான்? கிராப்பு வெட்டி இருந்தான்? என்னை பாருங்க மேல ஒரு வேட்டி கீழ ஒரு வேட்டி, தலை மழிச்சிருக்கேன். காதில் கடுக்கன் போட்டிருக்கேன். நாக்கில் மட்டும் தமிழ் இருந்தா பத்தாது தம்பி, கலாச்சாரம் நம்மளோட எல்லா செயலிலும் இருக்கனும். நீங்க ஜீன்ஸ், டீசர்ட் போடலைனா நான் ஏன் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசப் போறேன்? தமிழ் கலாச்சாரத்தை மொழியில் மட்டும் கடைபிடிக்கனும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி தந்திருக்காங்க. கலாச்சாரம் மொழியில் மட்டும் அல்ல, உடை, உணவு அப்புறம் நம்ம செயல் இதில் எல்லாம் இருக்கு” என என் பிரசங்கத்தை முடித்தேன்.

“சாமி நீங்க சொல்லும் போது தான் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி” என சொல்லி திரும்பி நடக்கத் துவங்கினார். அப்பொழுது என் மொபைல் போன் ”பிரம்மம் ஒக்கட்டே...” என்று சுந்திர தெலுங்கு ஒலிக்கத் துவங்கியது. அவர் திரும்பி முறைக்கும் முன் மாயமானேன், :)
------------------------------

எல்லாம் உங்க புண்ணியம்

என்னிடம் சிலர் நலமா என கேட்டால், “எல்லாம் உங்க புண்ணியத்தில நலமா இருக்கேன்” என்பேன். உடனே “எனக்கு எங்க புண்ணியம்..” என அலுத்துக்கொள்வார்கள். தங்களின் புண்ணியத்தை கூட பிறருக்காக கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் மேலும் புண்ணியம் தானே ஏற்படும்? ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை என்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும்? ஆனால் என்னிடம் நலமா என கேட்பவர்கள் இறைவனின் வடிவமாக நினைத்து எல்லாம் உங்க புண்ணியம் என்கிறேன். ஆனால் அவர்கள் புண்ணியத்தை தர மறுக்கிறார்கள்.

இப்ப சொல்லுங்க இது பாவமா புண்ணியமா?

--------------------------------------

ஜென்

கண்களின் கண்கவர் காட்சியும்
நாசியின் நல்நறுமணமும்
காதில் விழும் இன்னிசையும்
உண்ட உணவின் அற்புத ருசியும்
மனையாளின் ஸ்பரிசமும்
அனுபவிக்கும் ஷணத்தில்
அனுபவம் வெளியில் இருந்து கிடைப்பதில்லை
அனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என
உணர்ந்து என்னையே காணவும்,
முகரவும், கேட்கவும், சுவைக்கவும்
துவங்கி ஸ்பரிசித்து வருகிறேன்.

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

Tuesday, November 1, 2011

வானில் கேட்ட அசிரிரீ

போஸ்ட் ஆபீஸில் தபால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொண்டிருந்தேன்.

சற்று தொலைவில் ஒரு நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி என்னை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரை பார்த்ததும் புன்னகையுடன் என்னிடம் வந்து...

”நீங்க....அந்த”

“ஆமாம்.. ப்ரணவ பீடம்..சொல்லுங்க..”

”அது இல்லைங்க...நீங்க....ச்சே சரியா ஞாபகம் வரலை...”

“வேதிக் ஐ ப்ளாக் எழுதரவனும் நாந்தான்..அத்தானே நீங்க கேட்கனும்?..”

“ம்..இல்லை.. தொண்டையில நிற்குது ஞாபகம் வரல...ச்சே..”

“பதட்டப்படாம யோசிங்க.. எம் பேரு ஸ்வாமி ஓம்கார்”

“ம். இப்ப ஞாபகம் வருது ... அந்த தி....”

“ஆமா.ஆமா..தினம் தினம் திருமந்திரம் புத்தகம் எழுதுனது நாந்தான்”

“அது இல்லைங்க.. திலகாவோட மச்சினன் தானே நீங்க?”

"................................."

அப்பொழுது கேட்ட அசிரிரீ “ எத்தனை வாட்டி ஆணவம் அழிக்க உதவினாலும் நீ திருந்தமாட்ட...”