Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, February 3, 2012

புற்றுநோய் விழிப்புணர்வு யோக பயிற்சி..!


நவநாகரீகம் என்ற பெயரிலும், உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நாம் பெற்ற பலன்கள் ஏராளம். ஆனால் நாம் இழந்தது ஒன்றே ஒன்று தான். அதன் பெயர் ஆரோக்கியம்..!

முன்பு நம் வீட்டில் அதிகபட்சமாக கேஸ் அடுப்பில் உணவு சமைப்போம். தற்சமயம் மைக்ரோவேவ் அவன் இருந்தால் தான் மதிப்பு என ஆகிவிட்டது.

என் குழந்தை கப் நூடுல்ஸ் தான் விரும்பி சாப்பிடுவான் என சொல்லுவதால் பல தாய்மார்கள் நவீன தாய்மார்களாக ஜொலிக்கிறார்கள்,

எலுமிச்சை அடங்கிய சோப் பாரில் தான் நாம் பாத்திரம் துலக்குவோம். அதே சமயம் எண்ணை பிசுக்கு போக அலுமினிய கம்பிகள் கொண்ட ஸ்க்ரபர்கள்.

இதனால் நாம் வரவேற்பது என்ன தெரியுமா? புற்றுநோய்...! 

புற்றுநோய் வந்தப் பிறகு “நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்” என புலம்புகிறார்கள்.

அடிப்படையில் உங்கள் வாழ்க்கை தன்மையால் நீங்களே உங்கள் உடலுக்கு பாவம் செய்து விட்டீர்கள் என அப்பொழுது பதில் சொல்லி பிரயோஜனம் இல்லை..

இத்தகைய வாழ்வியல் குறைபாடுகள் அகற்றி நல்ல யோக பயிற்சியுடன் முழுமையான ஆரோக்கியம் பெற நேசம் மற்றும் ப்ரணவ பீடம் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

உங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஆரோக்கிய குடும்பம் என்ற நிலையை அடையுங்கள்.

அனுமதி இலவசம்
வாழ்வியலில் சிறிது மாற்றம் செய்து புற்றுநோயை விரட்டுங்கள்...!  

1 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

இடவசதி கருதி முதலில் வரும் 80 பேர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் அனுமதி. இரண்டு பிரிவாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 35 முதல் 40 பேர்கள் இருப்பார்கள். முதல் பிரிவு காலையிலும் இரண்டாம் பிரிவு மாலையிலும் நடக்கும். குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. யோகா செய்ய வசதியான உடையுடன் வரவும்.

நிகழ்ச்சி நடக்கும் இடம் :




ப்ரணவ பீடம்,
பொன்னுரங்கம் ரோடு,
ஜெயின் கோவில் எதிரில்
ஆர்.எஸ் புரம்

நேரம் : முதல் பிரிவு : காலை 9 முதல் 12 மணி வரை

இரண்டாம் பிரிவு - மாலை 4 முதல் 7 மணி வரை.


தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9994108710