Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, April 15, 2014

அருணாச்சல விநாயகர் நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேக அழைப்பிதழ்

அன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அருணாச்சல விநாயகர் என்ற திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 10,11 தேதிகளில் நடைபெற இருக்கிறது.

எனது மாணவர் திரு.அருணாச்சலம் மற்றும் அவரின் குடுபத்தாரின் ஆழ்ந்த பக்தியால் உருவாகி இருக்கிறது இந்த கோவில். பல்வேறு கோவில்கள் விநாயகருக்கு இருந்தாலும் இக்கோவில் சில சிறப்புகளை கொண்டது. தனது இல்லத்தில் இருந்த விநாயகர் கோவிலை விரிவாக கட்ட என்னிய திரு.அருணாச்சலம் அவர்கள் என்னிடம் வடிவமைப்பு பற்றி யோசனை கேட்டார். 

நம் கலாச்சாரத்தில் விநாயகர் முழு முதற்கடவுளாக வணங்கப்படுகிறது. அதே சமயம் அருவுருவமாகவும் முழுமுதற்கடவுளாகவும் ஸ்ரீமேருவை ஆன்மீகவாதிகள் வணங்குகிறார்கள். இரண்டையும் இணைந்து வடிவமைக்கும் எண்ணம் இறையருள் அளித்தது. அதனால் கோவிலின் கோபுரமே முழுமையாக ஸ்ரீமேருவாக ஆகாயத்தை நோக்கியும். கோவிலின் கருவறையின் உட்புறம் பூமியை பார்த்த நிலையில் ஒரு ஸ்ரீமேருவாக இருக்கும் படியும் வடிவைத்து இறையருளால் முழு கற்கோவிலாக அமைந்திருக்கிறது. மஹாபலிபுரம் போன்ற பழமையான கட்டிடகலை நுணுக்கத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.


இது தவிர கருவறையில் அமர்ந்திருக்கும் விநாயக பெருமானின் பீடத்தில் உள்ளேயும் ஒரு ஸ்ரீமேரு என மூன்று நிலைகளை குறிக்கும் வகையில் ஸ்ரீசக்ர மேரு கோவிலாக உருவாகி இருக்கிறது இந்த அருணாச்சல விநாயகர் கோவில்.

கோவிலின் அற்புதத்தை காணவும், நூதன அஷ்டபந்தன கும்பாபிஷேகத்திற்கும் வந்து இறையருள் பெருமாறு பேரன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு திரு அருணாச்சலம் : 9443107780

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.



Friday, April 11, 2014

திருச்சி ஆன்மீக பயணம் 2014

ஆன்மீக அன்பர்களுக்கு எனது வணக்கம்.

வரும் ஏப்ரல் மாதம் 26,27[சனி-ஞாயிறு] ஆம் தேதிகளில் திருச்சி
பகுதியில் உள்ள முக்கிய திருத்தலங்களுக்கு செல்கிறேன்.

என்னுடன் திருத்தலங்களை தரிசிக்க விரும்பும் அன்பர்கள் பங்குபெறலாம்.
இதற்கு கட்டணம் இல்லை.

தங்குமிடம் போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவை
நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டியது. இறைவனின் சன்னிதானமும்  எனது இருப்பும் உங்களுக்கு விருப்பம் எனில்
பயணம் செய்யலாம்.

இதற்கு முன்பதிவு தேவையில்லை.

நிகழ்ச்சி நிரலில் நான் குறிப்பிட்ட இடங்களுக்கு அந்த சமயத்தில்
நீங்கள் இருந்தால் போதும்.

26 சனிக்கிழமை 

ஸ்ரீரங்கம் 

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில்
காலை 8 மணி முதல் 12 மணி வரை இருப்பேன்.

திருவானைக்காவல்

ஜல ஸ்தலம் என கூறப்படும் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி
கோவிலில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இருப்பேன்.

27 ஞாயிறு 

மலைக்கோட்டை

ஞான மலை என அழைக்கப்படும் மலைக் கோட்டை உச்சி பிள்ளையார் மற்றும் தாயுமான ஸ்வாமி கோவில்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை.

மேற்கண்ட கோவில்களின் தரிசனத்தின் பொழுது  சத்சங்கம், பஜன், மந்திர ஜபம் மற்றும் தியானம் நடைபெறும்.

-------------------------------------

ஆன்மீக பயணங்களுக்கு கட்டணம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பிற விமர்சனம் கொண்டவர்களுக்காக இத்தகைய பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
திறந்த மனதுடன் தென்றலை போல ஆன்மீக நோக்கத்துடன் என்னுடன் பயணியுங்கள். 

தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்