Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 19, 2014

வேதகால வேளாண்மை - பகுதி 1

ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஜோதிட சாஸ்திரத்தை தொகுத்துள்ளேன். அனைத்து மக்களுக்கும் புரியும்படியாக விவசாய விஷயங்களை எளிமையாக கொடுத்துள்ளேன். வேதகால வேளாண்மை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்.அதில் மேலும் ஆழமாகவும் விவசாய குறிப்புகளுடனும் தகவல்கள் இருக்கும். 

பழங்காலம் தொட்டு ஜோதிடமும் முஹுர்த்த சாஸ்திரமும் விவசாயத்திற்காகவே கண்டறியப்பட்டது. நம் ப்ரணவ பீடத்தில் 2007ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு என தனியே பஞ்சாங்கம் வெளியிடுகிறோம். வேளாண்மை பல்கலைகழகத்தில் இது பாடமாகவும் இருக்கிறது. 

இந்த வருடம் பகுத்தறிவு கொண்டவர்கள் என கூறும் பலர் வேளாண்மை பல்கலைகழகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் என கேள்விபட்டேன். நம் கலாச்சாரத்தை  இழிவுபடுத்த மேலை நாட்டின் கலாச்சாரத்தை தாங்கிபிடிக்கும் பகுத்தறிவாளிகள், மேலை நாட்டில் பல வருடமாக BIO Dynamics என பஞ்சாங்கம் கொண்டு விவசாயம் செய்கிறார்களே? அதற்கு மாநாடு வேறு உலகாளாவிய அளவில் நடக்கிறதே? அதற்கு என்ன விளக்கம் சொல்லுவார்கள்? இச்செயலை பார்த்தால் இவைகள் எல்லாம் வேறும் வெறுப்பறிவு பகுத்தறிவல்ல என்பது தெளிகிறது. இதனால் உண்மையை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை தொடர். 
----------

ஜோதிட சாஸ்த்திரத்தை பல துறைகளில் பயன்படுத்தினாலும், தற்சமயம் வேளாண் துறையில் பயன்படுத்துவது குறைவே. இயற்கையில் கிடைக்கும் ஆற்றல்களை உபயோகித்து விவசாயம் செய்யும் முறையில் கிரக ஆற்றலை கொண்டும் விவசாயம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உண்டு.

இயற்கை விவசாயம் என்பது இயற்கையில் உள்ள சக்தியை , உயர் நிலையில் பயன்படுத்தி விளைச்சல் காண்பது என்கிறார்கள். நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சி கொல்லியைக் காட்டிலும் இயற்கையான பஞ்சகவ்வியம் மற்றும் தசகவ்வியத்தைக் கொண்டு வளப்படுத்துகிறார்கள். இந்த சிறப்பான முறையுடன், வேதத்தின் கண் எனக் கூறப்படும் ஜோதிட சாஸ்த்திரத்தையும் இணைத்து பயன்படுத்தினால் புதிய பரிமாணத்திற்கு வேளாண்துறை செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஜோதிட சாஸ்த்திரத்தை இயற்கை விவசாயத்துடன் இணைத்து பயன்படும் இந்த முறை "வேதகால வேளாண்மை"  எனலாம்.

ஜோதிடத்தை பயன்படுத்துவது என்றவுடன் கிரக ஆற்றலை மட்டும் பயன்படுத்துவது என நினைக்க வேண்டாம். ராசி மண்டலம், நட்சத்திர மண்டலம் மற்றும் இதர ஜோதிட குறியீடுகளான திதி, யோகம் என அனைத்தையும் பயன்படுத்துகிறோம். பிரபஞ்ச ஆற்றலை முழுமையான முறையில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் சூட்சுமங்களை பின்வரும் பகுதிகளில் காண்போம்.

மேல்நாட்டில் சிலர், கிரக ஆற்றலை வேளாண்மைக்கு பயன்படுத்துகிறார்கள். இதற்கு "Bio-Dynamic" முறை என அழைக்கிறார்கள். இது முழுமையான முறை இல்லை. காரணம் , இந்திய ஜோதிட முறையைத் தவிர வேறு எந்த ஜோதிடமுறையிலும் நட்சத்திரங்கள்  எனும் கோட்பாடு இல்லை . நட்சத்திரங்கள் இல்லை என்றாலே திதி மற்றும் ஏனைய பஞ்சாங்க நுணுக்கங்கள் இருக்க வாய்ப்பில்லை. இதனால் மேல்நாட்டினர் திதியை முழுமையாக பயன்படுத்தாமல் அமாவாசை, பௌர்ணமியை மட்டும் பயன்படுத்துகிறார்கள். மேலும் சனி, ராகு/கேதுவுடன் சந்திரனின் இணைவை ஆராய்கிறார்கள். இந்த முறையை பயன்படுத்தினால் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வேளாண் செயல்களைச் செய்ய முடியும்.


பஞ்சாங்கம்:

பஞ்சாங்கம் என்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம். கிமு 5000  வருடத்திற்கு முன்பே பஞ்சாங்கம் கணிக்கும் முறை இருந்ததற்கு சாட்சிகள் உண்டு.  வேத சாஸ்திரத்தின் தோற்றத்தை காலம் எனும் பரிமாணத்தில் அடக்க முடியாது. அத்தகைய  தோற்றமும் முடிவும் இல்லாதது என  கூறப்படும் வேத சாஸ்திரத்தில் அதர்வண வேத பிரிவின் கீழ் "கணிதா" (Ghanitha) எனும் பகுதி  உள்ளது. இதில் கோள்களின் நிலையை துல்லியமாக கணிக்கும் பஞ்சாங்க கணிதம் கூறப்பட்டுள்ளது. வருடத்திற்கு பல கோடி செலவழித்து நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கோள்களின் நிலையை , வெள்ளைதாளும் - எழுதுகோலும் கொடுத்தால் நமது நாட்டு பஞ்சாங்க கணிதர்கள் சில மணி நேரத்தில் கணித்து விடுவார்கள்.

பஞ்சாங்கம் எனும் வடமொழி சொல்லை , ஐந்து அங்கங்களை பற்றி கூறும் நூல் என மொழிபெயர்க்கலாம். வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவையே இதன் பஞ்ச அங்கங்கள் அகும். நமது முன்னோர்கள் பஞ்சாங்கத்தை பயன்படுத்தி வேளாண்மை 
செய்து வந்தார்கள். இந்த முறையை எளிமைப்படுத்தி  நவீன கால வேளாண்மைக்கு ஏற்றவாறு அளித்துள்ளேன். ஜோதிடத்தில் கூறப்படும் கிரகம், நட்சத்திரம், திதி, யோகம் இவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கடந்த பத்து வருடங்களாக பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். 

கிரகம் :

சூரிய மண்டலத்தில் நவகிரகங்கள் சுற்றிவருவது நமது பள்ளி நாட்களில் அறிந்தது தான். இதில் சூரியன் முதல் சனி வரை 7 கிரகங்கள் உருவமாகவும் , ராகு - கேது அருவமாகவும் (உருவமில்லாமல்) சூரிய மண்டலத்தில் உலா வருகிறது. இதை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே கணித்த  நம் முன்னோர்கள் , நவகிரகத்தின் செயல்பாட்டிற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 கிரகங்கள் சூரியன் முதல் சனி வரை ஆட்சிசெய்கிறது. ராகு - கேதுக்கள் தனி ஒரு நாளை ஆட்சி செய்யாமல் ஏழு நாட்களிலும் சக்தியை வழங்குகிறது. சமஸ்கிருதத்தில் கிழமைகளை "வாரம்" என அழைப்பார்கள். வாரநாட்கள் அனைத்தையும் சமஸ்கிருதத்தில் கிரகப்பெயரால் சோம வாரம், மங்கள் வாரம் (திங்கள் கிழமை - செவ்வாய் கிழமை) என அழைக்கிறார்கள். ஒரு கிரகம் குறிக்கும் கிழமையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதாரணமாக திங்கள் கிழமை அன்று சந்திரனின் அலைவரிசை அதிகமாக இருக்கும்.   

வடமொழி காலண்டர், ஆங்கில காலண்டர் மற்றும் தமிழ் காலண்டர் அனைத்திலும் வார நாட்கள் அனைத்தும் ஒன்று போல  இருப்பதைக் கொண்டு கிரகத் தாக்கத்தின் முக்கியதுவத்தை அறியலாம். இதனை அறிந்த முன்னோர்கள் , அந்த கிரகம் குறிக்கும் வேலையை அதன் ஆற்றல் உள்ள கிழமையில் செய்து வந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என நிருபித்தனர். சனி - நீர் தன்மை கொண்ட கிரகம். அதனால் சனிக்கிழமை உடலில் நீர் சத்து அதிகரித்துக் காணப்படும். எனவே சனிக்கிழமைகளில் ஆண்களுக்கு எண்ணெய் குளியல் செய்ய வேண்டும் என்றார்கள். இதனால் நீர் தன்மையும் - எண்ணெய் தன்மையும் கலக்காமல் , தோல் பகுதி கழிவுகளை எண்ணெய் வெளியேற்றிவிடும். ஆனால் சூரியன் ஆட்சி செய்யும் ஞாயிறு அன்று இதைச் செய்தால் சூரியன் உஷ்ணத்தை குறிப்பதால் எண்ணெய் தோல்பகுதியில் இணைந்து கழிவாக மாறி நோய் உண்டாக்கும். 

கிரகங்கள் உடலில் இது போன்ற விளைவை ஏற்படுத்துவது போல தாவரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கிழமையின் அடிப்படையில் தாவரங்களை பராமரிப்பது அவசியம். கிரகங்கள் குறிக்கும் கிழமைகளும் அன்று செய்ய வேண்டிய வேளாண் பணிகளும்  பின்வருமாறு,


வேளாண் செயல்களுக்கு மட்டுமல்லாமல் பயிரிடப்படும் தாவர வகைகளும் கிரகம் சார்ந்து இருந்தால் நல்ல விளைச்சலைத் தரும்.

கிரகங்கள்  பயிர்வகைகள்

சூரியன் தானியம், கோதுமை
சந்திரன் அரிசி வகைகள்
செவ்வாய் மூலிகைச் செடிகள்
புதன் அவரை- துவரை, பருப்பு வகைகள்
குரு பழங்கள் , சதைபற்றுள்ள காய்கறிகள்
சுக்கிரன் பூக்கள், பழங்கள்
சனி கிழங்கு வகைகள் , தென்னை , எண்ணெய் வித்துக்கள்

கிரகத் தன்மைக் கொண்டு செய்யப்படும் செயல் வீணாகாது. மேலும் சில கிரகங்கள் மற்ற கிரகத்தின் தன்மைக்கு எதிர் தன்மை வாய்ந்தது. எனவே ஒரு கிரகம் ஆட்சி செய்யும் நாளில் அதற்கு எதிரான தன்மை உள்ள பணிகளையோ , பயிர்வகைகளையோ செய்தால் வேளாண்மை பாதிக்கும். உதாரணமாக செவ்வாய் அன்று செய்ய வேண்டிய பணிகளை வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ செய்தால் பயிர்களுக்கு பாதிப்பு வர வாய்ப்புண்டு.  ஒரு கிரகத்திற்கு எதிர் தன்மை உள்ள கிரகம் எது என தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. அதற்கு பதிலாக அந்த கிரகம் குறிக்கும் செயலை மட்டும் செய்தாலே மேன்மை கிடைக்கும்.

நட்சத்திரங்கள்

பிரபஞ்சத்தில் 27 நட்சத்திர கூட்டங்கள் உண்டு. இந்த நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களைக் கொண்டே கிரகங்கள் இயங்குகின்றன. எனவே கிரகங்களை காட்டிலும் நட்சத்திரங்களின் ஆற்றல் மிக முக்கியமானது. மின்சார பல்புகள் மின்னாற்றலில் இயங்குவதைப் போல கிரகம் , நட்சத்திர ஆற்றலில் இயங்குகிறது. எனவே நட்சத்திர ஆற்றலைக் கொண்டு வேளாண் செயல்களை செய்தால் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும். 

நட்சத்திரங்கள் 27 நட்சத்திர கூட்டங்களாக பிரபஞ்சத்தில் அமைந்திருக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் ( 9X3=27 நட்சத்திரங்கள்) ஆட்சி செய்கின்றன.  கிரகங்களின் செயல்பாடுகளை  கொண்டு வேளாண் பணிகளை செய்ததைப் போல , நவகிரகங்கள் அதன் தாக்கத்தை இந்த நட்சத்திரங்களுக்கு அளிப்பதால் , விவசாய பணிகளை மேலும் சிறப்பாக செய்யலாம். நட்சத்திரங்களின் மூலம் கிரகங்கள் 

செயல்படுத்தும் வேளாண்மை பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


       வார நாட்களைக் கொண்டு வேளாண்மையை செய்யும் பொழுது ராகு - கேதுவின் செயல்களை முழுமையாக பயன்படுத்த முடியாது. ஆனால் நட்சத்திரங்களைக் கொண்டு வேளாண் பணிகளை செய்தால் ராகு - கேதுவை பயன்படுத்த முடியும். கிழமைகளை பயன்படுத்தும் பொழுது ஏழு தன்மைகள் மட்டுமே கிடைக்கும். கிழமையுடன் நட்சத்திரத்தை யும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிக கிரக அமைப்புகள் ( 27 நட்சத்திரம் X 7 வார நாட்கள் = 189) கிடைக்கும்.  

உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை , உத்திரம் , உத்திராடம் வந்தால் சூரியன் சம்மந்தப்பட்ட வேளாண் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். நட்சத்திரங்களுக்கும் கிழமைகளின் அதிபதிகளுக்கும் எதிர் - எதிர் தன்மை கிடையாது. உதாரணமாக செவ்வாய் கிழமையில் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்- விசாகம் - பூரட்டாதி அமைந்தால் செவ்வாய்க்கு உண்டான உழுதல், செடியை செதுக்குதல் போன்ற பணிகளையும் குருவுக்கு உண்டான விதைத்தல் , விதையை ஊர வைத்தல் , பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற இரு கிரகத்தின் வேலையையும் செய்யலாம். ஆகவே நட்சத்திரங்களையும் கிழமைகளையும் பயன்படுத்தும் பொழுது அதிகமான நற்பயன்களைப் பெற முடியும்.

(தொடரும்)

8 கருத்துக்கள்:

திவாண்ணா said...

கிரகங்கள் பயிர்வகைகள்// தர்பை எதுல சேரும்?

ஸ்வாமி ஓம்கார் said...

தர்பை இயற்கையா கிடைக்கும் புல்வகை. அது விவசாயம் மூலமா பயிர் செய்யப்படுவதில்லை.

இருந்தாலும் ஒன்பது வகையான புல்வகைளை கிரகம் குறிக்கும். அதில் கேது குறிப்பது தர்ப்பை புல்லை.

திவாண்ணா said...

:-)) அது சரி! நவக்ரஹ ஹோமத்தில கேதுவுக்கு தர்ப்பைதான் சமித்!

ஸ்வாமி ஓம்கார் said...

//கேதுவுக்கு தர்ப்பைதான் சமித்!//

அப்ப இதை சொன்ன நான் சமத்து? :D

திவாண்ணா said...

ம்க்கும்! அந்த பட்டம் வாங்கணும்ன்னா இந்த தொடரை ஒழுங்கா சீக்கிரமா எழுதி முடிக்கணும்!

ரங்கன் said...

1974 - நானும் என் விவசாய நண்பர்களும் "பகுத்தறிவு'' நிறைந்து இருந்த காலம். எதிர் வீடு ரங்கநாத அய்யர் ''இருங்கடா ஏர் பூட்ட நாள் குறித்துக் கொடுக்கிறேன்" என்று சொன்னார். நான் படு கிண்டலுடன் " மாமா இன்னிக்கி ஆரம்பிச்சா பூமா தேவி இழுத்துண்டு போய்விடுவாளோ " என்று சொன்னது நன்கு நினைவுக்கு வருகிறது. (மனதுக்குள் "பகுத்தறிவுக் கேள்வி " - இந்த பழைய பஞ்சாங்கங்கள் எல்லாம் என்றுதான் மாறப்போகிறதோ !! ) விவசாயம் செய்தோம் - சில காலத்துக்கு. இன்று தொண்டை மண்டலத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் விவசாயம் ஏதோ பெயருக்குத்தான் நடக்கிறது. அதுவும் 60 க்கு மேல் உள்ள நபர்களால், ரங்கநாத அய்யரிடம் நாள் பார்க்க கற்றுக் கொண்டவர்களால்.

santa said...

மிகவும் பயனுள்ள செய்தி....வாழ்த்துக்கள்.

Irai Kaathalan said...

Thank You !!!